தமிழ்நாட்டில் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை! புதிய திட்டம் அறிமுகம்!

2 Min Read

சென்னை, செப்.1- தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டிற்காக புதிய திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் மானியம் வழங்க உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் உள்ளிட்டோர் பயன் பெறலாம். இந்த மானியம் சுயதொழில் தொடங்க வழங்கப்படுகிறது.

மகளிருக்கான தமிழ்நாடு
அரசின் திட்டங்கள்

தமிழ்நாடு அரசு சார்பாக மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உதவி தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக பெண்கள் சிறு தொழில் செய்ய உதவிடும் வகையில் 50ஆயிரம் மானியம் வழங்கும் புதிய திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

சுய தொழில் தொடங்க உதவி

தமிழ்நாட்டில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் உள்ளிட்டோர் வாழ் வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் முக்கியமாக 200 பயனாளிகளுக்கு தலா 50ஆயிரம் ரூபாய் வழங்க ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

50ஆயிரம் ரூபாய் மானியம்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப் பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உண வகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக் கடைகள் போன்ற சுய தொழில் செய்ய உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு – ஒப்புதல் அளித்த அரசு

இந்த நிலையில் சமூக நல ஆணையர், ஆதரவற்ற மகளிர் நல வாரிய வங்கிக்கணக்கில் ரூ.1.61 கோடி இருப்பதாகவும், இதில் மானியம் வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை செலவு செய்ய அனுமதியளிக்க கோரிய நிலையில், தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த மானியத்தை பெற, வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறை என்ன?

25 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டும் மானியம் பெற தகுதி யுடையவராவார்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

மானியத்தை பெற, விண்ணப்பத் துடன், கைம்பெண், கணவனால் கைவிடப் பட்டவர், நலிவுற்றவர், ஆதர வற்றவர் மற்றும் பேரிளம்பெண் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று, வருவாய் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *