கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

1 Min Read

பெங்களூரு, செப்.1 கருநாடக முதலமைச்சர் சித்தராமையா ஹுப்பள்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘மாநில அரசியல் வரலாற்றில் பாரதிய ஜனதா கட்சி, மக்கள் ஆதரவுடன் சொந்த பலத்தில் ஆட்சி அமைத்ததில்லை. ஆபரேஷன் தாமரை மூலம் பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, அதன் மூலம் தான் அதிகாரத்தை இரண்டு முறை அனுபவித்துள்ளது. மூன்றாவது முறையும் ஆபரேஷன் தாமரை மூலம் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதை உறுதி செய்யும் வகையில் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப் பினர் இருக்கும் ரவிகுமார் கனிகா விடம் ரூ.100 கோடி வரை பேரம் பேசியுள்ளனர். ரூ.100 கோடி என்ன ரூ.500 கோடி கொடுத்தாலும் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விலை போகமாட்டார்கள். பாஜ மற்றும் மஜதவினர் எனக்கு எதிராக மட்டுமில்லாமல், எனது தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அந்த கட்சி தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *