ஒன்றிய பிஜேபி அரசின் உபயம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

viduthalai
1 Min Read

சென்னை, செப். 1- பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே எரிவாயு உருளை விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக எரிவாயு உருளை விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விலை 38 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று (1.9.2024) முதல் வணிக எரிவாயு உருளை விலை 1,855 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *