தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஆயிரம் மலிவு விலை மருந்தகங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

2 Min Read

கோவை, ஆக.31- கோவை யில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (30.8.2024) சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அய்ரோப்பியாவில் கண்டறி யப்பட்ட குரங்கம்மையானது தற்போது உலகம் முழு வதும் 121 நாடுகளில் பரவி யுள்ளது. இதையடுத்து உல கில் குரங்கம்மை என்ற நோய் பரவி வருவதால் அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார இயக்குநர் கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன் னாட்டு விமான நிலையங்களிலும் குரங்கம்மை தொடர்பான சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத் தப்படுகின்றனர். மேலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் தனி வார்டும் தொடங்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை பாதிப்பு யாருக்காவது கண்டறியப் பட்டால் அவர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. அத்துடன் காய்ச்சல் பரிசோதனையும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற் கொள்ளப்படுகிறது. இதற்காக காய்ச்சல் கண்டறியும் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை தொடர்பாக விமான பயணிகளுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 அரசு மருத்துவமனைகளிலும் தலா 10 படுக்கை வசதிகளுடன் பிரத்யேக பிரிவும் (வார்டு) தொடங்கப்பட்டுள்ளது. இது வரை யாருக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை.

மலிவு விலை மருந்தகங்கள்

தமிழ்நாட்டில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் ‘முதல்வன் மருந்தகம்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி வருகிற பொங்கல் விழா முதல் தமிழ்நாட்டில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் 1000 முதல்வன் மருந்தகம் முதல மைச்சரால் தொடங்கி வைக்கப் படும். இதன் மூலம் மக்கள் பயன் அடைவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் பாதுகாப்பு வசதி சிறப்பாக உள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையிலும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *