கனகசபை மீது ஏறி ‘சாமி தரிசனம்’ செய்ய வசூல்: தீட்சிதர்கள்மீது பெண் பக்தர் புகார்

1 Min Read

சிதம்பரம், ஆக.31- சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக தீட்சிதர்கள் மீது ஜெயஷீலா என்ற பெண் பக்தர் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயசீலா (வயது 39), என்பவர் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றேன், அப்போது அங்கிருக்கும் தீட்சிதர்கள் பக்தர்களிடம் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய ரூ.200 வசூலித்துக் கொண்டிருந்தனர். கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு ஏன் 200 ரூபாய் வசூல் செய்கிறீர்கள்? என்று கேட்டபோது, அங்கு இருக்கும் சில தீட்சிதர்கள், ‘‘உன்னால் முடிந்தததை பார்த்துக்கொள்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என புகார் மனுவில் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்பாபு இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஏற்கெனவே வேறொரு குற்றச்சாட்டு சம்பந்தமாக ஜெயஷீலா அளித்த புகாரில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *