சிறீரங்கம் கோயிலில் பக்தர்கள் திடீர் போராட்டம்

1 Min Read

அரசியல்

சிறிரங்கம், ஆக. 8 – ரங்கநாதர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பெரிய ராஜகோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், பெரிய திருவடி என்றழைக்கப்படும் பெரிய கருடாழ்வார், ஆரியபடாள் வாசல் மற்றும் அருகே உள்ள சிறிய திருவடி என்ற ழைக்கப்படும் கம்பத்தடி ஆஞ்சநேயர், கொடி மரம், நாழிகேட்டான் கடந்து பெருமாளைக் காண்பர்.

இக்கோயிலுக்கு கடந்த 2015இல் குடமுழுக்கு நடத்தப் பட்டது. அப்போது, சிறிய திருவடி என்றழைக்கப்படும் கம்பத்தடி ஆஞ்சநேயரை 5 அடி நகர்த்தி சுற்றி வலம் வந்து காணும் வகை யில் அமைக்கப்பட்டது.

இது ஆகம விதிகளுக்கு எதி ரானது என்று கூறி பொள்ளாச்சியை சேர்ந்த திருமால் அடி யார்கள் குழாம் ஒருங்கிணைப் பாளர் சீனிவாசன் என்பவர் தலைமையில் 120 பேர் கடந்த மார்ச் மாதம் சிறீரங்கம் கோயி லுக்கு வந்து கம்பத்தடி ஆஞ்சநேயர் தூண் அருகே அமர்ந்து பஜனை பாடல்கள் பாடி போராட் டம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று  கோயி லுக்கு வந்த 50 பேர் கருடாழ்வார் சன்னதியில் கும்மியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த தாசில்தார் சிவக் குமார் மற்றும் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் கலைந்து சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *