புதுச்சேரியில் கே.ஜி.எஸ். இல்ல மணவிழா – தமிழர் தலைவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

1 Min Read

புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்சன் ஹாலில் கே.ஜி.எஸ். தினகரன் – கமலி தினகரன் இணையரின் மகன் கே.ஜி.எஸ்.டி. சரத், இரா. பிச்சாண்டி – தாட்சாயணி பிச்சாண்டி இணையரின் மகள் பி. நிவேதிதா ஆகியோரின் இணையேற்பு விழாவை இன்று (30.8.2024) காலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி முன்னிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள்: க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன், மக்களவை உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், இரா. ரவிக்குமார், மேனாள் மக்களவை உறுப்பினர் பொன் சிகாமணி, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், அய்யப்பன், சபா. ராஜேந்திரன், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் ஹனிபால், செந்தில்குமார், சம்பத், புதுச்சேரி சட்டமன்றத் தலைவர் எஸ்.பி. சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கடலூர் மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *