கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

30.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்திட வலியுறுத்தி உள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் கிரிதாரி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
< பிரிட்டிஷார் ஆட்சியைவிட மோடி ஆட்சியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெரும் பணக்காரர்கள் மட்டுமே வளர்ந்து வருகிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கு.
< பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< இளைஞர்கள் மனதில், ‘தோல்வியையும் வெற்றியையும் ஏற்றுக்கொள்’ என்ற முழக்கத்துடன், ‘பாரத் டோஜோ யாத்ரா’ நடத்த ராகுல் திட்டம்!
தி ஹிந்து:
< கருநாடக அரசு வழங்கிய எஸ்.சி., எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ்களின் அடிப்படையில் 1978 முதல் 1987 வரை அரசு, பொதுத்துறையில் சேர்ந்தோரின் பணி நியமனம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
2001-க்குப் பிறகு சேர்ந்தோரின் ஜாதி சான்றிதழ் செல்லாது என அறிவிப்பு.
தி டெலிகிராப்:
< அரசமைப்பு நிபுணரும், சிறந்த எழுத்தாளரும், சட்ட வல்லுநருமான ஏ.ஜி.நூரானி தனது 94ஆவது வயதில் காலமானார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
< ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாக, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை, குழுவில் விவாதிக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் வலுவான கோரிக்கையை தொடர்ந்து, ஓபிசி நலனுக்கான நாடாளுமன்றக் குழு தனது நிகழ்ச்சி நிரலில் சேர்த்தது.
< பட்டியல் ஜாதியினர் (எஸ்சி) / பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பொதுமக்களிடம் உள்ள வளர்ச்சி வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள எஸ்சி/எஸ்டிகளுக்கான தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில கவுன்சில் அமைக்கவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண் காணிப்பு குழுக்களை உருவாக்கவும் வழி வகுத்து, முழு செயல்முறைக்கும் சட்ட அடிப்படையை வழங்குகிறது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *