“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்

viduthalai
9 Min Read

செங்கல்பட்டில்….

செங்கல்பட்டு, ஆக. 30- 24.8.2024 அன்று மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரியார்வளாகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ எச் பிரிவு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கழக செயலவைத் தலைவர் ஆ.வீர மர்த்தினி தலைமையில், மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் தந்தை பெரியார்

வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க! முழக்கத்துடன் பொருளாளர் வீ குமரேசன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார், ஒன்றிய தலைவர் ம. நரசிம்மன் தலைமை உரையாற்றினார், மாவட்ட செயலாளர் அ செம்பியன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செ. வினோத்குமார், ப.க. மாவட்ட அமைப்பாளர் கு.பிச்சை முத்து, ப.க. மாவட்ட செயலாளர் சி.தீனதயாளன், காஞ்சிபுரம் மாவட்ட இணைச்செயலாளர் ஆ. மோகன், காஞ்சிபுரம் மாவட்டம் மகளிர் பாசறை செயலாளர் ரேவதி, பேரமனூர் தலைவர் விஜயராகவன், செயலாளர் கி.நீலகண்டன், ம. ஏழுமலை ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் தொடக்க உரை ஆற்றினார்.

கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் பெண்களுக்கான சொத்துரிமை பெண்களுக்கான உரிமைகள் பெண்களுக்கான பல திட்டங்களையும் ஜாதி ஒழிப்புக்கான பல்வேறு தீர்மானங்களையும் எடுத்துக் கூறி அப்படிப்பட்ட உரிமைகள் எல்லாம் இன்றைக்கு கேள்விக்குறியாகி உள்ளன ஆகவே அதற்காக நாம் பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பேசும்போது, முதல் சுயமரியாதை இயக்க மாநாட்டின் 80 ஆம் ஆண்டு விழா அ.கோ.கோபால்சாமி மாவட்ட தலைவராக இருந்த போது கொண் டாடப் பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் மூடநம்பிக்கைகளால் நம் முன்னேற்றத்திற்கு ஏற்படும் தடைக ளையும் இந்திய அரசியல் சட்டம் 51ஏ(எச்) பிரிவை விளக்கியும் சிறப்புரை ஆற்றினார்.

மறைமலைநகர தலைவர் திருக்குறள் வெங்கடேசன் திமுக வார்டு கவுன்சிலர் எஸ். சதீஷ், ஏகாம்பரம், முனுசாமி, கிருஷ்ணன் திமுகவினர் கலந்து கொண்டனர் நடிகர் முத்துக்குமாரசாமி, எழுத்தாளர் சொக்கலிங்கம், பாலாறு கூட்டியக்க தலைவர் அருங்குன்றம் தேவராஜன், சு. பொன்மணி, கிறிஸ் டோபர், அ.பா. கருணாகரன் பொதுக் குழு உறுப்பினர் மாநில இளைஞரணி செயலாளர் ஆகியோர் கலந்து கொண் டனர். ஒன்றிய தலைவர் யாக்கோபு நன்றி உரையினை சிறப்பாகக் கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

கூடுவாஞ்சேரியில்…

திராவிடர் கழகம்

 

கூடுவாஞ்சேரி, ஆக. 30- 24.8.2024 அன்று மாலை 6 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு- பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்ட 51A(h)பிரிவு விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் நடை பெற்றது.
கூடுவாஞ்சேரி மா.இராசு தலைமையில் கூடுவாஞ்சேரி நகர தலைவர் இரா.மகாலிங்கம் வரவேற்புரையில் மாவட்ட தலைவர் ப.முத்தையன் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார்.

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் க.கருணாநிதி, தாம்பரம் சு.மோகன்ராஜ், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், மதுரவாயல் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு.வேல்சாமி, க.செல்லப்பன், அ.கருப்பையா, ரெ.கதிர்வேல், படப்பை சந்திரசேகர், பழனிசாமி, தனசேகர், ராமசந்திரன், தட்சிணாமூர்த்தி, ரவி சித்தமல்லி தமிழன்பு, அறிவுமானன், ஆனந்தன், டேவிட் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தனர்,

மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரை ஆற்றினார். பா.மணியம்மை சிறப்புரையில், பொதுமக்கள் மத்தியில் நமது இயக்கமாம் திராவிடர் கழகம் நூறாண்டு கண்ட இயக்கம். இதன் நிறுவனத் தலைவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் அவர் வழிவந்த அவர் தலைமை ஏற்று அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார்கள். தந்தை பெரியார் அவர்களின் மாணாக்கர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை ஏற்று அவர் வழிகாட்டுதல் படி இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது. தலைவர் இடும் பாதுகாப்பான கட்டளைகளை கட்டுப்பாடுடன் செயலாற்றி வருகிறோம் அந்த வகையில் மூட நம்பிக்கையால் மக்கள் படும் துன்பங்களை எல்லாம் பட்டியலிட்டு இன்று நாட்டில் நடைபெறும் அனைத்து அவலங்களுக்கெல்லாம் மூல காரணம் கடவுள்,மதம்,ஜாதி ஆகிய கட்டுமானங்களை மக்கள் உடைத்தெறிந்து அறிவுள்ள சமூகமாக மக்கள் வாழ வேண்டுமானல் மக்களுக்கு பகுத்தறிவு சிந்தனை வளர வேண்டும். அப்போது தான் நம் நாடு உலகில் தலை நிமிர்ந்து நிற்கும். ஆகவே மக்கள் மூடநம்பிக்கை இல்லாமல் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு எதிர் காலச் சமூகத் திற்கு எடுத்துக் காட்டாக திகழவேண்டும் என்று தன் உரையை நிறைவு செய்தார்.

கூட்டத்தை பொதுமக்கள் திரளாக ஆங்காங்கே நின்றும், பேருந்து பயணி களும், மாணவ, மாணவிகள் ஆகியோர் செவிமடுத்தனர். நன்றியுரை தாம்பரம் மாவட்ட தொழிலாளரணித் தலைவர் மா.குணசேகரன் நன்றி கூறினார்.

தாம்பரம் – குன்றத்தூரில்…

திராவிடர் கழகம்

குன்றத்தூர், ஆக. 30- தாம் பரம் கழக மாவட்டம் குன்றத் தூர் பெரிய தெரு சிவன் கோயில் அருகில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம் பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h)பிரிவு விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் 19.8.2024 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு குன்றத்தூர் நகர கழகத் தலைவர் மு.திருமலை தலைமையில் கரைமா நகர் ப.கண்ணதாசன் மற்றும் தே.சுரேஷ் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார் மாவட்ட தலைவர் ப.முத்தையன்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் மற்றும் வழக்குரைஞர் தி.இர.சிவசாமி ஆகியோர் உரையாற்றினர்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆற்றிய சிறப்பு ரையில்,

மூடநம்பிக்கையை மக்களிட மிருந்து எப்படியாவது களையப் பட வேண்டும் அதற்கு ஒரே தீர்வு கழகத் தோழர்கள் கடுமையாக மக்களிடையே களப்பணியாற்ற வேண்டும் பெண்ணுரிமையை நாம் தான் கடந்த நூறாண்டாக பாதுகாத்து வருகிறோம் இந்த செய்தி மக்களுக்கு நாம் கூட்டங்கள் போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் இந்திய அரசியல் சட்டம் 51 A(h)பிரிவை விளக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் அறிவாசான் தந்தை பெரியார்,அன்னை மணியம்மையார் தற்போது கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அவர் இடும் கட்டளையை நிறைவேற்றி முடிப்போம் என்று தன் சிறப்புரையை நிறைவு செய்தார்கள்.

கூட்டத் தொடக்கத்தில் அனகாபுத்தூர் பெரியார் சிலம்ப பயிற்சி பள்ளி பெரியார் பிஞ்சுகள் 45 நிமிடங்கள் சிலம்பாட்டம், வாள் வீச்சு மற்றும் மான் கொம்பு சண்டை செய்து தங்கள் திறமைகளை மக்களிடம் செய்து காட்டி பாராட்டு பெற்றனர்.

கூட்டத்தை திரளாக ஆங்காங்கே நின்றபடி பொது மக்கள், வியாபாரிகள், கோயி லுக்குள் சென்று வந்த பக்தர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கழகக் கூட்ட கருத்துகளை கேட்டு மகிழ்வுடன் கலைந்தனர்.
நிறைவாக கூட்ட நிகழ்வாக கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜூக்கு “கர்லா கட்டை” பரிசாக வழங்கி மகிழ்ந்தனர் பெரியார் சிலம்ப பயிற்சி பள்ளி பெரியார் பிஞ்சுகள்.

கோ.நாத்திகன், ந.கரிகாலன்,எம்.ஜி.ஆர் நகர் கரு.அண்ணாமலை, கு.ஆறுமுகம், மா.குணசேகரன், கூடுவாஞ்சேரி மா.இராசு, எஸ்.ஆர்.வெங்கடேசன், அ.கருப்பையா, தென் சென்னை மணித்துரை, பூவை க.தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் சா. தாமோதரன், சிலம்பம் சி.சிவாஜி, பால முரளி, அ.பா.நிர்மலா ஊரப்பாக்கம் வழக்குரைஞர் இரா.உத்திரகுமாரன், பா.அபினா சுருதி, பா.கோவன் சித்தார்த், தி.திலீபன், தி.தீபக், சு.தமிழரசு,க.முரளி,சண்.யுவராஜ், குன்றத்தூர் சரவணன், அழகேசன், ஏழுமலை மற்றும் படப்பை சந்திரசேகர்.

பெரியார் பிஞ்சுகள் மணி மாறன், சிலம்பரசன், கலையரசி, தரணி, சாதனா, அம்பிரிஸ், வெற்றி செல்வி, தமிழ்செல்வி,ஷர்ஷினி, பிரனாவ்,தன்ஷிகா,ரோகித், லக்ஷனா,சாய்சரன் ஆகியோர் உணர்வுடன் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் அனகாபுத்துர் நகர தலைவர் சண்.பிரபாகரன் நன்றி கூறினார்.

மயிலாடுதுறையில்…

திராவிடர் கழகம்

மயிலாடுதுறை. ஆக. 30- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணு ரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51-A விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் 23.8.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நகர தலைவர் சீனி.முத்து தலைமையில் நடைபெற்றது.

நகர செயலாளர் பூ.சி காமராஜ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் ஞான வள்ளுவன், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், சீர்காழி ஒன்றிய தலைவர் சா.சந்திரசேகரன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி. பாண்டியன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் வழக்குரைஞர் என்.எஸ்.அழகிரி ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழக துணைப் பொதுச் செயலா ளர் வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், உலக அளவில் பகுத்தறிவை பேசிய அறிவியலாளர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை விவரித்தார். அவர்களிடமிருந்து எந்த வகையில் தந்தை பெரியார் வேறுபட்டு நின்று, தமிழ்நாட்டில் பகுத்தறிவைப் பரப்பினார் என்பதையும், தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையின் நோக்கம் என்ன என்பதையும் விளக்கினார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழகம் சாதித்த

சாதனைகளையும், பெண்களுக்காக பெரியார் சிந்தித்து இயற்றிய தீர்மானங் களையும், அதனை சாதித்துக் காட்டிய விதத்தினையும் விளக்கிப் பேசினார். பக்தி போதையை பயன்படுத்தி இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ், பிஜேபி சங்கப் பரிவார் கூட்டங்கள் மடைமாற்றம் செய்கிற போக்கினை விவரித்தார். கடவுள் பக்தி என்ற பெயரில் தங்களின் கல்வி, வேலை வாய்ப்புகள் பறிபோவதை எதிர்த்து இளைஞர்கள் போராட முன்வராமல் இருக்கும் சூழலை எந்த வகையில் மதவாதிகள் ஏற்படுத்தி வைத்திருக்கினர் என்பதை விளக்கினார். தற்போது இருக்கும் பிஜேபி ஆட்சியின் ஆபத்துகளையும், அவலநிலைகளையும் விளக்கி, அதற்கான தீர்வு தந்தை பெரியா ரின் கொள்கைகளில் தான் இருக்கிறது என்றார். மாவட்டச் செயலாளர் கி. தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள் தாஸ் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன், சீர்காழி ஒன்றிய செயலாளர் எஸ்.பி.செல்வம், மயிலாடுதுறை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் செல்லதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க செல்வராஜ், கே.ஜி.நாக ராஜன், பி.ராஜேந்திரன், நகர துணைத் தலைவர் இரெ.புத்தன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் கழக தலைவர் வி.ஆர்.முத்தையன், செயலாளர் ஆர்.ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கு இளஞ்செழியன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜெகன் சாமிக்கண்ணு, மயிலாடுதுறை நகர தி.மு.க செயலாளர் என்.செல்வராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை இயக்க தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மானாமதுரையில்..

திராவிடர் கழகம்

மானாமதுரை, ஆக. 30- சிவ கங்கை மாவட்ட கழகம் சார்பாக மானாமதுரையில் 28.08.2024 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டை யொட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ச.அனந்த வேல் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, மானாமதுரை நகர் கழகத் தலைவர் ச.வள்ளி நாயகம், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் பிரமனூர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மானாமதுரை மேனாள் பேருராட்சித் தலைவர் பெரியார் பற்றாளர் தீனதயாளன் தந்தை பெரியார் பற்றியும், சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். மானாமதுரை திமுக இலக்கிய அணிச் செயலாளர் நல்லாசிரியர். க.மோகன சுந்தரம், நகர் மன்ற உறுப்பினர்சதீஸ், பெரியார் பற்றாளர் கல் குறிச்சி ம.கார்த்தி கண்ணன் மற்றும் ஏராளமான பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினரும், மேனாள் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருமான ஆ.தமிழரசி, மானாமதுரை நகர் மன்றத் தலைவரும், மாநில ஆதி திரா விடர் அமைப்புத் துணைச் செயலாளருமான மாரியப்பன் கென்னடி, மானாமதுரை திமுக நகர் கழகச் செயலாளர் க.பொன்னுச்சாமி, மானாமதுரை கிழக்கு ஒன்றியச் செயலாளர் துரை. ராஜாமணி, மேற்கு ஒன்றியச் செயலாளர் ம.அண்ணா துரை ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர். இறுதியில் பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்துர் க. வீ.செயராமன் நன்றி உரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *