இந்நாள் – அந்நாள்

1 Min Read

கலைவாணர் நினைவுநாள் [30.08.1957]

1950 இல் பாரிஜாதம் என்ற படம் வெளிவந்தது.
மிகவும் புனிதமான பூவான பார்ஜாதத்தை முன்வைத்து பாமா ருக்மணி இடையே நாரதர் கலகம் மூட்டிவிடுவதுதான் இந்தப் பாரிஜாதக் கதை
இதில் வரும் ஒரு பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் இணைந்து பாரிஜாதம் பாடலைப் பாடினர். புனிதமான பவித்திரமான கடவுளே விரும்பும் பாரிஜாதத்தைவிட மக்கள் பசி போக்கும் நெல் மேலானது என்ற அந்தப் பாடல் அன்று அனைவராலும் ரசிக்கப்பட்டது.
பாரிஜாத பூவு நம்ம
பசிதனை தீர்த்திடுமா – இதை
பக்குவமா பாதுகாத்தா
பட்டினி வந்திடுமா… சொல்லு… (பாரிஜாத)
நாட்டுக்கு தேவையான நெல்மரம் – கொண்டு வந்த
நம்பியை சுத்தி வந்து கும்மியடிப்போம்
கூட்டமாக உழைத்து வாட்டமில்லாமல் இன்பம்
கூடவே பாட்டு பாடி கும்மியடிப்போம்…
நம்ம நாட்டுக்கு தேவையான நெல்மரம் – கொண்டு வந்த
நம்பியை சுத்தி வந்து கும்மியடிப்போம்
ஏரை எடுத்து பூமி உழக போறேன் பொண்ணே
கொஞ்சம் நேரம் பொறுத்தே
கஞ்சியும் கொண்டே வாரேன் மச்சான்
உழுது வெதச்சு தண்ணியும்
பாய்ச்சி காவலும் இருப்பேன்
பக்கம் உக்காந்து கிட்டு
வெத்தலை மடிச்சு வாயில கொடுப்பேன்
– இப்படி ஆணும், பெண்ணும் உழவுக்கு என்னென்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டு கடைசியில்,
பட்டினியுள்ள குடும்பங்களுக்கு
பகிர்ந்து கொடுப்பேன்…
சோத்து பஞ்சம் வராம செஞ்சுட்டே
யோசனை சரிதான் மச்சான்…
என்று முடியும்.
தெய்வீகத்தன்மை கொண்டது என்று நம்பப்படும் பாரிஜாதத்தால் எந்தப் பயனும் இல்லை, மக்கள் பசி போக்கும் உழவும் தொழிலும்தான் உன்னதமானது என்பதை இந்தப் பாடலில் கலைவாணர் எடுத்துரைத்திருப்பார்.
பக்திப் படம் ஒன்றில் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல பகுத்தறிவு விதைகளை நகைச்சுவையாய் விதைத்திருப்பார் கலைவாணர்.
இப்போது இது போல் ஒரு பாடல் பக்திப் படங்களில் வருமானால் சங்கிக்கூட்டங்கள் திரையரங்கு முன்பு காவிக்கொடியை தூக்கிக் கொண்டு போய் ஹிந்துக்களின் மனதை புண்படுத்துகின்றனர் என்று கூக்குரலிடுவார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *