அறிவிப்பு!

1 Min Read

பாலியல் தொல்லை தந்ததாகக் கேரள நடிகைகள் வாக்குமூலம். நடிகர்கள்மீது வழக்குப் பதிவு. தமிழ்த் திரையுலகில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்ற நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவிப்பு!
மழை அறிவிப்பு
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது என்றும், சென்னையில் இரண்டு நாள்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மய்யம் அறிவித்துள்ளது.
வருந்துகிறோம்!
ஏழுமலையான் காப்பாற்றவில்லையே
கார் மோதி பக்தர்கள் நான்கு பேர் பலி
அய்தராபாத்,ஆக.30 தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தைச் சேர்ந்த வர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குக் காரில் சென்றனர். தரிசனத்தை முடித்துவிட்டு அதே காரில் அய்தராபாத் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் விரைந்தனர். மக பூப்நகர் அருகே அதிகாலையில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை அந்த கார் திடீரென இழந்தது. இதனால் நிலை தடுமாறி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோதி நொறுங்கியது. இவ்விபத்தில் காரில் பய ணித்த 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *