நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு

viduthalai
1 Min Read

சென்னை, ஆக. 30- தடைபாதைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றக் கோரும் வழக்கிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில். கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வாராகி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது,

நடைபாதைகள் ஆக்கிரமிப்பு

சென்னையில் சாலையோ ரங்களில் பொதுமக்கள் நடப்பதற்கு கட்டப்பட்டுள்ள நடைபாதைகளை பலர் கடைகள். உணவகங்கள் வைத்தும். வாடகை வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தியும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால். பொதுமக்களால், சாலையோர நடைபாதைகளை பயன்படுத்த முடியவில்லை. அவர்கள் வாக னங்கள் செல்லும் சாலையில் நடந்து செல்கின்றனர். சில சமயம் வாகனங்கள் மோதி அவர்கள் பலியாகின்றனர்.

நடவடிக்கை இல்லை

குறிப்பாக சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள இ.எஸ்.அய்., மருத்துவமனை சாலையோரத்தில் நடைபாதைகள், அசோக் நகர் 4ஆவது அவென்யூ, வேளச் சேரி மெயின் ரோடு, தியாகராயர் நகர் ஹிந்தி பிரச்சார சபா சாலை, ஜி.என்.செட்டி ரோடு. கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதிகளில் சாலையோரங்களில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும். சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாலையோர நடை பாதைகளில் உள்ள கடைகள், வாகனங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
-இவ்வாறு அதில் கூறியிருந் தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ண குமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு நேற்று (28.8.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஜானகிராமன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, இந்த மனுவுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் 2 வாரத்துக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *