திருமருகல் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் – பட ஊர்வலம் நடத்த முடிவு!

Viduthalai
1 Min Read

திருமருகல், ஆக.29- நாகை மாவட்டம் திரு மருகல் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் கலந்து ரையாடல் கூட்டம் 26.8.2024 மாலை 6.30 மணிக்கு புத்தகரம் – தந்தை பெரியார் படிப்பகத்தில் எழுச்சி யோடு நடைபெற்றது.
திருமருகல் ஒன்றிய கழக தலைவர் மு.சின் னதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் திற்கு மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராஜ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்தி.பொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை மாவட்ட திராவிடர் கழக செயலாளர்
ஜெ.புபேஸ் குப்தா கூட்டத் தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழக தலை வர் மு.குட்டிமணி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் செ.பாக்கியராஜ், பகுத்தறிவாளர் கழக சி.தங்கையன், நாகை நகர அமைப்பாளர் சண்.ரவிக்குமார், வட்டார விவசாய அணி செயலா ளர் மருங்கூர் காமராஜ், மருங்கூர் முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானங்களை செயல் படுத்துவது எனவும், செப்.17 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் சமூக நீதி நாள் விழாவினை கிளைக் கழகங்கள் தோறும் தோழர்களின் இல்லங்கள் தோறும் கழக இலட்சிய கொடியேற்றி ஒலிபெருக்கிகள் அமைத்து இனிப்புகள் வழங்கி எழுச்சியோடு கொண்டாடுவது என்றும், செப்.28 ஆம் தேதி திருமருகல் சந்தைப் பேட்டையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் தந்தை பெரியார் பட ஊர்வலத்தினை எழுச்சியோடு நடத்துவது எனவும், தொடர்ச்சியாக கழக பிரச்சாரக் கூட்டங் களை நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் இறு தியில் பெரியார் பிஞ்சு ரூசோகுப்தா அனை வருக்கும் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *