நேற்றைய நாள், மக்களாட்சியின் கருப்பு நாள்!

Viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   டுவிட்டர் செய்தி!

அரசியல்

சென்னை, ஆக.8 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

தலைநகர் டில்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டில்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய (7.8.2023) நாள், மக்களாட்சியின் கருப்பு நாள்! ‘‘எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப் போம்” என்ற பாரதீய ஜனதாவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது? 

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலை நகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக் கான தண்டனையை டில்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்! 

மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், டில்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந் துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத் தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநி லங்களவையில் வாக்களித் திருப்பது எனக்கு அதிர்ச்சி யளிக்கவில்லை. “நான் யாருக்கும் அடிமை யில்லை” என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, “கொத்தடிமையாக” தரையில் ஊர்ந்து கொண்டிருக் கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

– இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *