ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

1 Min Read

ஜெயங்கொண்டம், ஆக.29- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி யில் நடைபெற்ற ஜெயங் கொண்டம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு எறிபந்து, கைப்பந்து போட்டிகள் 27.8.2024 அன்று நடை பெற்றன.

தமிழ்நாடு

போட்டியின் நடுவராக எறிபந்து போட்டியில் ரவிசங்கர் மற்றும் கார்த்தி பங்கேற்றனர்.

அதில் ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் எறிப்பந்து போட்டியில் 14 மற்றும் 17 வயதுக்குட் பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றனர்.

கைப்பந்து போட்டி யில் 14 மற்றும் 17 வயதுக் குட்பட்ட போட்டிகளில் மாணவர்கள் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். கைப்பந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் மாண வர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.
மற்றும் 14, 19 வயதுக் குட்பட்ட எறிப்பந்து பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தனர். முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

போட்டியில் வென்ற வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ராஜேஷ், ரஞ்சனி மற்றும் ரவிசங்கர் ஆகியோரை பள்ளி தாளாளர், முதல்வர் ,இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *