வலசை தெரியா பறவை… வழிகாட்டும் விமானங்கள்

1 Min Read

இடம்பெயரத் தெரியா பறவைகளுக்கு உதவுகிறார்கள் மனிதர்கள் விமானம் மூலம்.

ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் அரிய வகைப் பறவைகளுக்கு எப்படி இடம்பெயர்வது என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது.

மனிதர்கள் சிறிய விமானத்தைப் பயன்படுத்திப் பறவைகளுக்கு வழிகாட்டுகின்றனர்.
பேட்டர்ஸெல் (Paterzell) நகரில் உள்ள திடலில் நார்த்தன் பால்ட் அய்பிஸ் எனும் அரிய வகைப் பறவைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு சிறிய விமானம் புறப்பட்டதும் அதனைப் பறவைகள் பின்தொடர்கின்றன.

ஆஸ்திரியாவில் உள்ள ஆராய்ச்சிக் குழு பயிற்சியை அளிக்கிறது.

கிட்டத்தட்ட 300 பறவைகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பறவைகள் சுயமாகப் பறந்து சென்றுவிடும் என்று ஆய்வாளர்கள் எண்ணினர்.

ஆனால் எங்குச் செல்வது என்று தெரியாமல் அவை தவறான திசையில் பறந்து சென்று இறந்துவிட்டன.

அதனால் பறவைகளுக்கு விமானத்தைப் பின்தொடர்வதற்குப் பயிற்சி தரப்பட்டது.

பறவைகள் மனிதர்களை அவற்றின் தாய் என்று நினைத்துக்கொண்டு பின்தொடர்கின்றன.

ஒரு காலத்தில் மத்திய அய்ரோப்பாவில் அந்த அரிய வகைப் பறவைகள் வாழ்ந்தன.

வேட்டைக்கு இரையானதால் 17ஆம் நூற்றாண்டில் அவை அழிந்துவிட்டன.

அந்தப் பறவைகளை மீண்டும் அங்குக் கொண்டுசெல்ல உலகம் முழுதும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பறவையைக் கண்டான் விமானம் செய்தான். இப்போது பறவை விமானத்தைத் தொடர்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *