படுக்கை வசதிகளுடன் 150 புதிய பேருந்துகள் தமிழ்நாட்டில் அறிமுகம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2 Min Read

சென்னை, ஆக.29 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (28.8.2024) தொடங்கி வைத்தார்.

அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக ரூ.90.52 கோடி மதிப்பிலான 150 புதிய பேருந்துகள் நேற்று (28.8.2024) பயன்பாட்டுக்கு வரப் பெற்றன.

இவற்றை சென்னை, பல்லவன் சாலையில் உள்ள ஒன்றிய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்தில் ஏறி பார்வையிட்டு ஆய்வும் செய்தார்.

இந்நிகழ்ச்சியில், போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், மு.சண்முகம், சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேருந்துகளில் இடம்பெற் றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: “புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதி யோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பய ணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் சொகுசு பயணத்துக்காக முன்புற ஏர் சஸ்பென்சன் (Air Suspension) வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர், குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன.

படுக்கைகளுக்கு இடையே அதிகமான இட வசதியும், தடுப்பும் உள்ளன.

ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட், மின்விசிறி வழங் கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்புக்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது. பயணி களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஒலிப் பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளை வைக்கவும், சரக்கு பார்ச லுக்காகவும் போதிய இட வசதி உள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக் கும் வகையில் புதிய பேருந்துகளின் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து அணைக்கும் வகையில் எஃப்டிஎஸ்எஸ் (FDSS)கருவி பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் கடிகராம் போன் றவையும் இடம்பெற்றுள்ளன” என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *