நெய்வேலியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா

viduthalai
1 Min Read

நெய்வேலி, ஆக.28- நெய்வேலியில் உள்ள என்எல்சி ஓபிசி சங்கத்தின் வளாகத்தில் சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர் களின் உருவ சிலை திறப்பு விழா 22.8.2024 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது.

அகில இந்திய ஓபிசி கூட்டமைப் பின் பொதுச் செயலாளர் கோ.கருணா நிதி மற்றும் என்.எல்.சி. ஓபிசி நல சங்க நிர்வாகிகள் முன்னிலையில் சட்ட மன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் சிலையை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு

பின்னர் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவை என்எல்சி ஓபிசி சங்கத்தின் நிர்வாகிகள்: விஎன்.புரு ஷோத்தமன் (தலைவர்), ஏ.அழகுராஜ் (பொதுச் செயலாளர்), எம்.கணேசன் (பொருளாளர்), பி.பாலாஜி (அலுவலக செயலாளர்), வி.என்.தமிழரசன் (பொதுச் செயலாளர்), பி.கார்த்தி கேயன் (துணை பொருளாளர்) ஆகி யோர் முன்னின்று மிகச் சிறப்பாக நடத் தினர்.

முருகன் (பொது மேலாளர் பணியாளர் நலன்), பழனி யப்பன் (மேனாள் ஓபிசி தொடர்பு அதிகாரி) மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஏ.ராஜசேக ரன் (அய்ஓபி) மற்றும் எம்.இளங்கோவன் (அய்அய்டி-எம்) மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

நல சங்கத்தின் உறுப்பினர்கள், தோழமை அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சமூக நீதிக்காக தனது பிரதமர் பதவியைத் துறந்த மாமனிதர் வி.பி.சிங் அவர்களை என் றென்றும் நினைவு கூரத்தக்க வகையில் நல சங்க அலுவலக வளாகத்தில் சிலை நிறுவிய
என்.எல்.சி. ஓபிசி நல சங்க நிர்வாகிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *