இளைய தலைமுறையினரை பாதுகாக்க ‘விறுவிறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ – செயல்திட்டம்

1 Min Read

சென்னை, ஆக.28- இளைய தலை முறையினரிடம் நடக்கும் பழக்கம் குறைந்து வருவதால், அவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ குறித்த செயல் திட்டத்தை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.

உலகளவில் இதய பாதிப்பு, பக்க வாதம், புற்றுநோய், நாள்பட்ட சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட தொற்றா நோய்களால் ஆண்டுக்கு 4.1 கோடி பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறு வனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், அதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2030ஆம் ஆண்டுக்குள் தொற்றா நோய் களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரிடம் தொற்றா நோய் களை கட்டுப்படுத்தும் விதமாக, ‘விறு விறு நடையால் ஏற்படும்20 நன்மைகள்’ குறித்த விழிப்புணர்வு செயல் திட்டத்தை பொதுசுகாதாரத்துறை செயல்படுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறுகையில், “இன்றைய இளம் தலைமுறையினரிடையே, நடத்தல் என்பது குறைந்துள்ளது. வீட்டு அருகில் இருக்கும் கடைகளுக்கு கூட இரு சக்கர வாகனத்தில் தான் செல்கின்றனர். வளர் பருவத்திலேயே நடக்காவிட்டால், 30 வயதுக்கு மேல், நீரிழிவு, இதய பாதிப்பு உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது.

அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இதற்கான விழிப்புணர்வு கையேடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லுாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத் தப்படும்” என்றார்.
என்ன நன்மைகள்? – இதய நோயின் அபாயத்தை குறைப்பது, உடல் எடையை பராமரிப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, உடல் ஆற்றலை அதிகரிப்பது, மனநிலையை மகிழ்ச்சியாகமாற்றுவது, ரத்த ஓட்டத்தை சீராக்குவது, உடல் பருமனைகுறைப்பது, மனக் கவலையைகுறைப்பது, நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிப்பது உட்பட விறுவிறு நடையால் 20 நன்மைகள் கிடைக் கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *