தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி – பரிசளிப்பு

1 Min Read

இராமநாதபுரம், ஆக. 28- இராமநாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி தங்கச்சிமடம் புனித யாகப்பர் பள்ளியில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.

முதல் பரிசு ரூ.3,000அய் தங்கச்சி மடம் அன்னை கொலஸ்டிரா கல்லூரியைச் சார்ந்த மாணவி சகாய பிரின்சி, இரண்டாம் பரிசு ரூ.2.000 மண்டபம் ராஜா கல்லூரியைச் சார்ந்த ஆர். சாலினி, மூன்றாம் பரிசு ரூ.1000த்தை கொலஸ்டிரா கல்லூரி மாணவி எம்.மைக்கேல் ஜான்சி, அறுதல் பரிசாக ரூ.600அய் கொலஸ்டிரா மாணவி எஸ்.நவுதில் நிசாரா பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, மாவட்டத் தலைவர் எம்.முருகேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ்.பேரின்பம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கெவின்குமார், ராஜ்குமார் மற்றும் பகுத்தறிவு கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *