இராமநாதபுரம், ஆக. 28- இராமநாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி தங்கச்சிமடம் புனித யாகப்பர் பள்ளியில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.
முதல் பரிசு ரூ.3,000அய் தங்கச்சி மடம் அன்னை கொலஸ்டிரா கல்லூரியைச் சார்ந்த மாணவி சகாய பிரின்சி, இரண்டாம் பரிசு ரூ.2.000 மண்டபம் ராஜா கல்லூரியைச் சார்ந்த ஆர். சாலினி, மூன்றாம் பரிசு ரூ.1000த்தை கொலஸ்டிரா கல்லூரி மாணவி எம்.மைக்கேல் ஜான்சி, அறுதல் பரிசாக ரூ.600அய் கொலஸ்டிரா மாணவி எஸ்.நவுதில் நிசாரா பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, மாவட்டத் தலைவர் எம்.முருகேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ்.பேரின்பம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கெவின்குமார், ராஜ்குமார் மற்றும் பகுத்தறிவு கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.