நேற்று (27.8.2024) சென்னை, கோட்டூர்புரம், தமிழ் இணையக் கல்விக் கழகக் கலையரங்கத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ள ‘கணித்தமிழ் மென்பொருட்கள்’ மற்றும் ‘தமிழைப் பிழையின்றி எழுதுவோம்’ நூலினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் சே.ரா.காந்தி, இணை இயக்குநர் ரெ.கோமகன், ஒருங்கிணைப்பாளர் அ.ஜேம்ஸ், உதவி இயக்குநர்கள் இரா.மதுரா, செல்வ புவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.