ஒன்றிய அரசுப்பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு விலக்களிக்கப் பட்டதை அடுத்து, ராஜஸ்தானிலும் ஆர்.எஸ்.எசுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மத அரசியலை, பாகுபாடு அரசி யலை முன்னெடுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் ஆதிக்கம், அரசுப் பணிகளிலும் ஊடுருவத் தொடங்கி யுள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றிய அரசுப் பணியாளர்களும், மாநில அரசுப் பணியாளர்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என அப்போதைய ஒன்றிய, மாநில அரசுகளால் தடைவிதிக்கப்பட்டது.
காரணம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கருத்தியல் ஒரு குறிப்பிட்ட அடக்குமுறை வன்முறை நடைமுறையை செயல்படுத்துவதே! அந்த கருத்தியல் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனை பிறப்பால் பிளவுபடுத்தியது. ஆகவே, பிறப்பால் பிளவுபடுத்தும் ஒரு கருத்தியலை அரசுப்பணியாளர்கள் பின்பற்றினால், அவர்களால் அனைத் துத் தரப்பு மக்களுக்கும் சமமான சட்டப் படியான சேவைகளை எப்படி செய்ய முடியும்?
எனினும், அடக்குமுறைவாத வாழ்வி யலை செயல்படுத்தியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில், ஆட்சியைத் தன்வசமாக்கிய பின், தனது எண்ணத்தை செயலாற்றி வருகிறது பி.ஜே.பி.,
அது மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசாக இருந்தாலும் சரி.
அதனை நிரூபிக்கும் வகையில் தான், கடந்த மாதம் ஒன்றிய அரசுப்பணியாளர்கள், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் ஈடுபடுவதற்கு இருந்த தடையை நீக்கியது ஒன்றிய பிஜேபி அரசு.
அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் பா.ஜ.க அரசும், அம்மாநில அரசுப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இனி ஈடுபடக் கூடாது என மாநில அரசுப்பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தர விட்டுள்ளது.
ஏற்ெகனவே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களான அரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆர்.எஸ்.எசுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசு நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தினால், அதன் விபரீதம் எந்த எல்லைக்குப் போகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆர்.எஸ்.எசின் தென் மாநிலங்களுக்கான கொள்கை விளக்கச் செயலாளராகவிருந்த
வி. சண்முகநாதன் ஒரு முறை சொன்னார்.
‘‘அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எசில் சேரலாமா என்று இப்பொழுது ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்கள். இந்தியாவில் பிரதமர், உள்துறை அமைச்சர், பல மாநில ஆளுநர்கள், பல நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான்’’ (‘தினமணி’ –14.2.2000) என்று சொன்னதுண்டே!
60 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நிர்வாகப் பதவிகளில் (Executive Posts) அரசு துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் முக்கிய பிரிவுகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமிக்கப்பட்ட உண்மையை விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணுபகவத் போட்டு உடைக்கவில்லையா?
நாடு நாச காலத்தை நோக்கிப் பயணிக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!!