கூட்டுறவு சங்கம்: புதிய செயலி அறிமுகம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஆக. 28- கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:-
கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக் கப்படும் தரமான பொருட்களை நுகர் வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யும் வகையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், நுகர் வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள் ஆகியவற்றின் மூலமாக அவர்களது சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இப்பொருட்களை எளிதில் சந்தைப்படுத்தவும், பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையிலும் தங்கள் இருப்பிடத்திலிருந்தே சுலபமாக பொருட்களைச் வாங்க ஏதுவாகவும் கூட்டுறவு கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கூட்டுறவு சந்தை கைப்பேசி செயலியை கூட் டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். இது பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இக்கைப்பேசி செயலியின் மூலம் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் 44 வகையான தரமான தயாரிப்புகளான மளிகைப் பொருட்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், உயர்தர தேன், மசாலா பொருட்களான மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொல்லிமலை காபித் தூள், சோப்பு வகைகள்.
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் 20 வகையான உயர்தர நுண்ணூட்டச் சத்துகள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் ஆக மொத்தம் 64 கலப்படமற்ற தரமான தயாரிப்புகளை வெளிச்சந்தையை விட குறைவான விலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவரவர் இல்லத் திலிருந்து பெற்று பயனடையும் வகையில் இக்கைப்பேசி செயலி உருவாக்கப் பட்டுள்ளது.

இப்பணியினை கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் பெரும்பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங் களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மேற்கொண்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *