க.கா.வெற்றி-இர.இரகுவர்மா இணையேற்பு விழா கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார் தமிழர் தலைவர் காணொலியில் வாழ்த்து

Viduthalai
2 Min Read

ஒசூர், ஆக.27- ஓசூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு.வனவேந்தன் – கோ.கண்மணி ஆகியோரின் மகள் க.கா.வெற்றி, தருமபுரி மு.இரவிக்குமார் – கண்ணகி ஆகியோரின் மகன் இர.இரகுவர்மா ஆகியோரின் மணவிழா ஓசூர் ஹோட்டல் ஹில்சில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
மணவிழாவிற்கு வருகைதந்த திராவிடர் கழகத் துணைத் தலைவரையும், மணமக்களையும் ஒசூர் விடியல் கலைகுழுவினர் பறையிசையுடன் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். நிகழ்விற்கு வருகை தந்த பெருமக்களை ஓசூர் மாவட்ட கழகத் தலைவரும், மணமகள் தந்தையாருமான சு.வனவேந்தன் வரவேற்று உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் மணமக்களை வாழ்த்திய காணொலி பதிவு ஒளிப்பப்பட்டது. 15 நிமிடங்கள் முடிந்தபின்பு அனைவரும் உற்சாகத்துடன் கைத்தட்டி மகிழ்ந்தார்கள். மணமக்கள் இருவரும் காணொலியை காட்சிப்படுத்திய போது இருவரும் திரையின் முன்பு நின்று கேட்டனர்.

மணமக்களை வாழ்த்தி ஓசூர் பொதுக்குழு உறுப்பினர் அ,செ.செல்வம், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். மணமகள் க.கா.வெற்றி மண விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

நிகழ்வில் ஓசூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் ஓய்.பிரகாஷ், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தையா,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராமசந்திரன், சிபிஅய் கட்சி மாதையன்,பிபிஎம் ஜெயராமன், மனித நேய மக்கள் கட்சி ஜாகிர்ஆலம்,தமிழ்தேசகுடியரசு இயக்கம் தமிழரசன் பிஜேபி மாவட்ட தலைவர் நாகராஜ், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், புரட்சிகர தொழிலாளர் முன்னணி மாணிக்கவாசகம் மதிமுக ஈழம் குமரேசன், திராவிடர் கழக ஓசூர் மாவட்டச் செயலாளர் மா.சின்ன சாமி, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ,திராவிடமணி, ஓசூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சிவந்தி.அருணாசலம், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பெங்களூர் அரங்கநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட கழகக் காப்பாளர் வேப்பிலைபட்டி அ.தமிழ்ச்செல்வன், ஓசூர் து.ரவி, தருமபுரி வீ.சிவாஜி, கதிர்.செந்தில், இர.கிருட்டிணமூர்த்தி, திராவிடர் கழக மாநில இளைஞ ரணி துணைச்செயலாளர் தரும புரி ம.செல்லத்துரை, யாழ்.திலீ பன், சமரசம், அரும்பாக்கம் சா. தாமோதரன், சு.மோகன்ராஜ், சி.வெற்றிச்செல்வி பூங்குன்றன், பா.வைரம், பா.வெற்றிச்செல்வன், கரு.பாலன், கிருட்டினகிரி செ.பொன்முடி, மு.இந்திராகாந்தி, கா.மாணிக்கம், இல.ஆறுமுகம், தி.கதிரவன், சி.சீனிவாசன், புதுக்கோட்டை க,வீரையா, பெல் ஆறுமுகம், சென்னகிருஷ்ணன், திருப்பத்தூர் பெ.கலைவாணன், எ.சிற்றரசு, முருகன், கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *