தந்தை பெரியார் எழுதிய ராமாயணக் கதாபாத்திரங்கள் என்ற நூல், ஹிந்தியில் சச்சி ராமாயண் என்ற தலைப்பில் லலாய் சிங் என்ற பகுத்தறிவாளரால் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உத்தரப்பிரதேச அரசு 1969 ஆம் ஆண்டு தடை விதித்தது.
இந்த தடையை அலகாபாத் உயர்நீதிமன்றம் 1976 ஆம் ஆண்டு நீக்கியது.
அண்மையில் இந்த நூலை வங்கமொழியில் சுப்ரியா பன்யோபத்யாய் மொழி பெயர்த்துள்ளார்.
2022 -ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் குறித்த ஆய்வரங்கம் மேற்குவங்கம் போல்பூரில் உள்ள சாந்திநிகேதனின் அர்தஷீலா கலையரங்கில் வரும் 28.08.2024அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது