உறுப்புகள் கொடை செய்தவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை

Viduthalai
1 Min Read

செய்யூர், ஆக.27 துரைபாபு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (25.8.2024) உயிரிழந்தார். அவர் இறந்ததையடுத்து அவ ரது உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை கொடை அளிப்பதாக மருத்துவர்களிடம் தெரிவித்ததையடுத்து துரைபாபு வின் உடல் உறுப்புகளை மருத்துவ நிர்வாகம் பெற்றுக்கொண்டது. துரைபாபு உடல் நேற்று முன் தினம் நீலமங்கலம் கொண்டு வரப்பட்டது.
மதுராந்தகம் கோட்டாட்சியர் தியாகராஜன், செய்யூர் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் துரைபாபு உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து துரைபாபு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *