“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்

Viduthalai
5 Min Read

தலைவாசலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

தலைவாசல், ஆக. 26- தலை வாசலில் திராவிடர் கழகத்தின் சார்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டை யொட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியலமைப்பு சட்டம் 51A h பிரிவு விளக்க பொதுக் கூட்டம் 24. 8.2024 அன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் த.வானவில் தலைமை வகித்து சிறப்பு செய்தார். நீ.சேகர் வரவேற்புரை அனைவரையும் வரவேற்று பேசினார்.
பக மாவட்ட துணை தலைவர் இலுப்பநத்தம் கா.பெரியசாமி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்ட காப்பாளர் இரா.விடுதலை சந்திரன் மந்திரமாக தந்திரமா செய்து காட்டி அனைவரையும் வியப்படைய செய்தார்.
மூடநம்பிக்கை பெண்ணுரிமை பாதுகாப்பு பற்றி மிகவும் சிறப்பாக பொதுமக்கள் மத்தியில் இளம் பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் ஆத்தூர் அ.சுரேஷ், பகுத்தறிவாளர் கழக தலைமை கழக அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன், சேலம் மாவட்ட செயலாளர் சி.பூபதி, சேலம் மாநகர் செயலாளர் ராவண பூபதி, பக மாவட்ட தலைவர் முருகானந்தம், வழக்கறிஞர் கோவிந்தன், பேராசிரியர் பெரியேரி சம்பத், குரால் விசிக மைக்கேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இக் கூட்டத்தில் கழக தோழர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஏராளமான ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இளைஞர்களும் பெண்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கார்முகிலன் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

தேனியில் பெண்ணுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்

திராவிடர் கழகம்

தேனி, ஆக. 26- தேனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டை ஒட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51 ஏ எச் பிரிவு விளக்க பரப்புரை கூட்டம் 24.08.2024 சனிக்கிழமை தேனி பழைய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி அளவில் தொடங்கியது.
இந்த நிகழ்வில் தேனி மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன் வரவேற்புரை ஆற்ற, தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் மா.சுருளிராஜ் முன்னிலையில் திராவிட கழக மாவட்ட அமைப்பாளர் செ.கண்ணன் பகுத்தறிவாளர்கழக தலைவர் மோகன் கருத்துரையாற்ற, நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பை மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், தேனி நகர தலைவர் ஓவியர் பிரவீன் குமார் சிறப்பாக செய்தார்கள்.

இந்த நிகழ்வில் திமுக நகர செயலாளர் நாராயண பாண் டியன், மதிமுக மாவட்ட துணை செயலாளர் தர்மர், சி.பி.அய்.எம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தருமர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிழவேந்திரன், தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி மீதுன் சக்கரவர்த்தி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மானமிகு நீலகனலன், தமிழ் புலிகள் கட்சி மாணவரணி மாவட்ட செயலாளர் குட்டி புலி, மக்கள் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் பூமிநாதன், வெல்பர் பார்ட்டி மாவட்ட தலைவர் தோழர் முகமது சகி, தமிழ் தேசிய மார்க்சிய கழக மதியவன் இரும்பறை, புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, புரட்சித் தமிழர் மாவட்ட செயலாளர் பா சின்னமுத்து, கழக தோழர்கள் அன்னக்கொடி, சாக்ரடீஸ், கழக முதுபெரும் தோண்டர் சகாதேவன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தலைமை கழக அமைப்பாளர் கா.சிவா, கழக பேச்சாளர் முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்ற, தேனி மாவட்ட திராவிட கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் சென்ட்ராயன் நன்றி கூறினார்.

மலேசியாவில் சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு விழா

திராவிடர் கழகம்

மலேசியா, ஆக.26- மலேசியாவில் உள்ள ஷாலாம் நகரில் நடை பெற்ற சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு மு கோவிந்தசாமி தலைமை தாங்கினார். தோழர்கள் தா பரமசிவம் மு மணி மாறன் கே ஆர் ஆர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் இடுப் பில் கட்டிய துண்டை தோளில் போட வேண்டும் சாலைகளிலே எல்லோரும் காலணி அணிந்து நடக்க வேண்டும் என்று கூறி பல போராட்டங்களை நடத்தி அதை செயல் வடிவில் கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்ட இயக்கமாக சுயமரியாதை இயக்கம் திகழ்கிறது.

இந்த நிகழ்வின் போது 70 க்கு மேற்பட்ட தோழர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது மற்றும் ஒப்பற்ற சிந்தனையாளர் பெரியார் என்ற நூலும் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
பெரியாரின் 1929 மற்றும் 1954 மலாயா வருகையின் போது அவர் ஆற்றிய உரைகள் – அவர் சென்று கண்ட இடங்களில் அங்குள்ள மக்களுக்கு அவர் கூறிய அறிவுரைகள் வாயி லாக இன்று இந்த சமூகம் பயனடைந்து உள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் பிள் ளைகள் இன்று பல்வேறு உயர்ந்த நிலைகளில் இருக் கின்றார்கள்.
மலாயாவில் பெரியார் என்ற தமிழ் நூலை ஆங்கில மொழியிலும் மலாய் மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டும் மற்றும் கலியன் புதைகுழி வழக்கை ஆவணப்படுத்த வேண்டும்.
கிள்ளான் பள்ளத்தாக் கில் ஏறக்குறைய 10 முதல் 15 தோட்டங்கள் சுமார் 30,000 ஏக்கர் நிலங்கள் மேம்பாட்டிற்காக தூண்டாடப்பட்டன இங்கு வாழ்ந்த 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. இந்த மக்களுக்கு வீடுகள் நிலங்கள் வேலைகள் வாங்கித் தருவதாக கூறி பல்வேறு வாக்குறுதிகள் கூறி நிதி வசூல் செய்து நிறைவேறாமல் போன வரலாறுகள் உண்டு.

இந்த நிலையை ஒப் பிட்டு நோக்கினால் பெரியார் நேர்மையில் இமயமலை போல் நிமிர்ந்து நிற்கின்றார். இதுபோன்ற செய்திகளை சிங்கப்பூர் பல்கலைக்கழக அச்சகம் பல புத்தகங்களின் வாயிலாக மிகவும் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
பெரியார் பன் னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்கள் தமது ரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இந்த நிகழ்வில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த தோழர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பெரியார் நூலக வாசகர் வட்டம் மற்றும் பெரியார் பாசறை தோழர்கள் கலந்து சிறப்பித்தனர். மலாக்கா, சிரம்பான், இப்போ மாநக ரங்களில் விரைவில் சுயமரியாதை இயக்க நூறாம் ஆண்டு விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *