வாசிங்டனில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை!

Viduthalai
1 Min Read

வாசிங்டன், ஆக.26- 28.7.2024 அன்று வடக்கரோலினா சேப்பல் ஹில் பகுதியில் செல்கள் ஆய்வு விஞ்ஞானி ஆண்டனி இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரனுக்கு வரவேற்பு விருந்தளிக்கப் பட்டது.
தந்தை பெரியார் காலம் தொட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் காலம் வரை நமது இயக்கத்தின் சமூக நீதிப் பணிகள் பற்றிய கலந்துரையாடலாக கருத்துகள் பரிமாறப் பட்டது. இது நாள் வரை கழகத்தின் இவ்வளவு சிறப்பான பணிகள் பற்றி பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட மக்களுக் காக அறியாமல் இருந்தது குறித்து வருத்தமுற்றார் விஞ்ஞானி. இப்போது அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியுற்றார்.

10.8.2024 அன்று பென் சில்வேனியா மாநிலம் பிளைமவுத்.மீட்டிங் நகரில் டாக்டர் நவீன் டாக்டர் ரகப் இல்லத்தில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரனுக்கு வரவேற்பு விருந்து அளித்து மகிழ்ந் தனர்.
தந்தை பெரியார் கொள்கை வழியில் மூன் றாவது தலைமுறையாக தாங்கள் வாழ்வதை பெருமையாக நினைவு கூர்ந்தனர். பெரியார் இயக்கத்தின் தொண்டின் காரணமாகத்தான் இப்போது இந்த அளவு வாழ்வில் உயர்வடைந்து இருக்கிறோம் படித்து முன்னேறி இருக்கிறோம் – என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் இப்போதும் இயக்கம் ஆற்றி வரும் தொண்டின் கனிவை விரிவாக எடுத்துரைத்தார்.
2.8.2024 அன்று மேரிலாண்ட் மாநிலம் போர்ட் வாசிங்டனில் அமைந்துள்ள சமத்துவத்தின் சின்னமாக திகழக்கூடிய டாக்டர் அம்பேத்கர் பேருருவ சிலையினை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் நேரில் சென்று பார்த்து மரியாதை செலுத்தி மகிழ்ந்தார். உடன் வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்க இயக்குநர்கள் பொறியாளர்கள் எழில் வடிவன், மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *