தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
தென்காசி, ஆக. 26- தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 23.8.2024 அன்று மாலை மேல மெஞ்ஞானபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது .
கழகக் காப்பாளர் சீ.டேவிட் செல்லதுரை தலைமை தாங்கினார். மாநில கழக ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று கும்பகோணத்தில் நடைபெற்ற கழகப்பொதுக் குழுவின் தீர்மானங்களை விளக்கியும், தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் பேருழைப்பால் தந்தை பெரியார் உலகமய மாகியுள்ளதை விளக்கியும் உரையாற்றினார்.
மருத்துவரும் எழுத்தாளருமான கவுதமி, மருத்துவர் பொன்மலர் ஆகியோர் பெரியார் உலகத்தினை அமைத்திட ஆசிரியர் அவர்கள் எடுத்துவரும் முயற்சியினையும்,நீட் தொடங்கி எந்தவித உரிமை பறிப்பினையும் எதிர்த்து போராடி வெற்றிதேடித்தரும் உழைப்பினையும் உணர்ச்சி பூர்வமாக எடுத்துரைத்தார்கள்.
பெரியார் உலகத்திற்கு ஒரு இலட்சம் வழங்கியிருப்பதாகவும், குடும்பத்தின் சார்பில் மேலும்ரூ.50,000/வழங்கவுள்ளதாகவும் பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
பெரியார் பெருந்தொண்டர் சீ.தங்கத்துரை, மாவட்ட துணைத்தலைவர் ம.செந்தில்குமார், இளை ஞரணி த.மணிவண்ணன், மாவட்டச் செயலாளர் கை.சண்முகம் ஆகியோர் செயலாக்கவுரை வழங்கினார்கள்.
கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அ.சவுந்திர பாண்டியன் தீர்மானங் களை வாசித்து உரையாற் றினார்.
கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் சீ.தங்க துரை, திராவிட மாணவர் கழக துணைச்செயலாளர் சு.இனியன், ப.க.தலைவர் தங்கராசு, டி ஆல்பர்ட், எஸ். ஜான்சிஜெயமலர், அன்னபுஷ்பம், கலா, ஞானமணி சமுத்திரம், டே. சாந்தி, எம். மல்லிகா, செல்வ மாதா, எம்.சுமித்திரா, மிக்கேலஅம்மாள், முருகன், ஜோன்ஸ் ராபின் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
கிளைக்கழக செயலா ளர் சேகர் நன்றி கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் 1.9.2024 அன்று நடைபெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு விளக்க கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு மிகச்சிறப்பான வர வேற்பு அளிப்பது என வும்,கும்பகோணத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மா னங்களை வரவேற்பதுடன், செயலாக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் பங்குபெற்று சிறப்பித்த மாவட்ட கழகத்தலைவர் வழக்குரைஞர் த.வீரன், திராவிட மாணவர் கழக துணைச்செயலாளர் சு.இனியன் இருவருக் கும் பாராட்டு தெரிவிக் கப்பட்டது.
13.8.2024 அன்று பிறந்தநாள் கண்ட கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை-டே.சாந்தி இணையினருக்கு பயனாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.
மாநில தகவல் தொழில்நுட்பச் செயலாளர் வி.சி.வில்வம் முயற்சியால்பேட்டியெடுக்கப்பட்டு ஞாயிறு மலரில் ஜாதியை ஒழித்த அன்னபுஷ்பம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள பேட்டியினை மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அ.சவுந்திரபாண்டியன் வாசித்தார்.
திராவிட இயக்க வீராங்கனை அன்ன புஷ்பம் அவர்களுக்கு மாவட்டக்கழகம் சார்பில் கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.