அண்ணா பல்கலை. தோ்வு கட்டண உயா்வு நிறுத்தி வைப்பு : அமைச்சா் க.பொன்முடி

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.26 அண்ணா பல்கலைக்கழக செமஸ்டா் தோ்வு கட்டண உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப் பட்டுள்ள பொறியியல் கல்லூரி களில் பயிலும் மாணவா்களின் தோ்வு கட்டணத்தை 50 சதவீதம் வரை உயா்த்தி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறி விக்கப்பட்டது.
இது குறித்து அமைச்சா் க.பொன்முடி நேற்று (25.8.2024) சென்னை கிண்டியில் செய் தியாளா்களிடம் கூறியதாவது: 2023-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில் செமஸ்டா் தோ்வு கட்டணங்கள் உயா்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாணவா்கள் நலன் கருதி கடந்த ஆண்டு பல்கலைக்கழக செமஸ்டா் தோ்வு கட்டணங்கள் உயா்த்தப்படாது எனவும், பழைய கட்டண முறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
நடப்பு கல்வி ஆண்டு தொடக்கத்தின் போது ஆட்சி மன்றக்குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட சமச்சீா் கட்டண உயா்வு மீண்டும் அம லுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.
ஆனால், மாணவா்களிடமி ருந்து பெறப்பட்ட கோரிக் கைகளின் அடிப்படையில், அடுத்த சிண்டிகேட்டில் தீா்மானம் நிறைவேற்றும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயா்த்தப்பட்ட தோ்வுக் கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது.
தோ்வு கட்டணத்தில் இப் போதுள்ள நடைமுறையே தொடரும். நிகழாண்டு மட்டுமல்ல, அடுத்தாண்டும் தோ்வு கட்டண உயா்வு நிறுத்திவைக்கப்படுகிறது.

தோ்வுக் கட்டணத்தை உயா்த்துவது மாணவா்களை பாதிக்கும் என்பதை கருத் தில் கொண்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தன்னாட்சி பெற்ற கல்லூரிகளிலும், செமஸ்டா் தோ்வு கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்பட வேண்டும் என்பதை வரையறை செய்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுற்றறிக்கை வழங்கப் படவுள்ளது. அண்ணா பல் கலைக்கழகத்தில் வசூல் செய்யும் தோ்வு கட்டணத்தைதான் தன்னாட்சிக் கல்லூரிகளும் வசூலிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத் தின் அங்கீகாரம் பெறுவதற்காக போலி பேராசிரியா்களைப் பயன்படுத்திய கல்லூரிகளின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *