வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளே எதிர்ப்பு

1 Min Read

பேராசிரியர்
எம்.எச்.ஜவாஹிருல்லா

விழுப்புரம், ஆக. 26- மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா நேற்று (25.8.2024) விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வக்பு வாரிய திருத்தச் சட்டம் 2024அய், மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவை, தி.மு.க., உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஆரம்பத்திலேயே எதிர்த்தன.
ஒன்றிய ஆளும் பா.ஜ.க., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும், இந்த மசோதாவுக்கு ஆட்சேபனை தெரிவித்தன. இந்த சட்டத் திருத்த மசோதா, சிறுபான்மை உரிமைகளை, மக்களின் வக்பு வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு கபளீகரம் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், பா.ஜ.க., கூட்டணியில் உள்ள நிதீஷ்குமார் உள்ளிட்டோரும் எதிர்த்துள்ளனர்.
நாங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சந்தித்து, இந்த மசோதாக்களின் தீமைகளை எடுத்துரைத்துள்ளோம். அவரும் எதிர்ப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *