தோல் என்பது மனிதர்களுடைய மிகப் பெரிய வெளிப்புற உறுப்பாக அமைந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப உடலை சீரான வெப்ப நிலையில் பராமரிக் கும் தோல் சுலபமாக நோய் தாக்குதலுக்கு உட்பட்டு விடுகிறது. அந்த வகையில் தோலில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மருத்துவர்கள் தெரிவித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.
இளம் வயதில் பொதுவாக ஏற்படக்கூ டிய பாதிப்பு முகப்பரு ஆகும். முகத்தில் தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை முகப்பரு பாதிக்கிறது. முகத்தின் தோலின் கீழே அமைந்துள்ள நுண்ணறைகள் என்ற சிறிய கால்வாய் போன்ற வழியில் என்னை சுரப்பிகளை இணைக்கும் சிறிய துளைகள் முகத்தில் உள்ள சருமத்தில் அமைந் துள்ளன. அவை ‘செபம்’ எனப்படும் ஒரு பொருளை சுரக்கின்றன. அவை அந்த நுண்ணுறைகளை அடைத்துக் கொள்வ தால் முகப்பரு உருவாகிறது. பருக்கள் முக அழகை பாதிப்பதால் அதற்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
இன்றைய சூழ்நிலையில் பரவலாக உள்ள ஒரு தோல்நோய் எக்ஸிமா ஆகும். இது தோல், முகம், முழங்கைகள்,முழங் கால்கள் ஆகிய பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துவதுடன் நீண்ட காலம் நீடிக்கும் தோல் நோயாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எக்ஸிமா ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடிவதில்லை.
அதனால் குடும்ப உறுப்பினர் களுக்கு இந்த நோய் இருக்கிறதா என்று மருத்துவர்கள் கேட்டு அதற்கு ஏற்பவும் சிகிச்சை முறைகளை கடைப்பி டிக்கிறார்கள்.
அடுத்ததாக தோலில் சிவப்பு நிறத்தில் ஏற்படக்கூடிய படை என்பது பரவலாக உள்ள ஒரு தோல் நோயாகும். இப்பாதிப்பு ஏற்படுவதற்கு மருந்துகள் அல்லது உணவு ஒவ்வாமை ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அது மட்டு மல்லாமல் தொற்று நோய்கள், மன அழுத்தம் ஆகியவற்றின் காரண மாகவும் படை ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆறு வயதுக்கு உட்பட்ட குழந் தைகள் இடையே ஏற்படக்கூடிய பொதுவான தோல் தொற்றுநோய் இம்பெடிகோ ஆகும். இந்த தோல் பாதிப்பு தோலில் ஏற்படக்கூ டிய சிறு காயங்கள், கீறல், அல்லது பூச்சிக் கடி காயம் மூலம் உடலுக்குள் நுழையும் பாக்டீரியா மூலம் உருவாகிறது. அதன் காரணமாக தோலில் பரு போன்ற புண்கள் ஏற்பட்டு அவற்றில் சீழ் பிடித்து விடும். அத னால் தோலில் அடர்த்தியான மேலடுக்கு உருவாகி வலி ஏற்படுகிறது. இந்த நோயை குணப்படுத்த நல்ல மருத்துவ சிகிச்சை கள் உள்ளன.
சொரியாசிஸ் என்பது பரவலாக உள்ள ஒரு தோல் நோயாகும். இந்த நோய் தாக் கியவர்களுக்கு தோல் செதில் செதிலாக உரிந்து சிவப்பு திட்டுக்களை ஏற்படுத்து கிறது. அதனால் தோலில் கடும் அரிப்பு உருவாகும். இந்த நோய் முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் கீழ் முதுகில் தோன்றும். சொரியாசிஸ் நோயை தொடர்ந்த சிகிச்சை மூலம் படிப்படியாக குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேண்டிடியாசிஸ் என்ற தோல் நோய் உடலில் கேண்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சையின் அதிக வளர்ச்சி காரணமாக ஏற்படு கிறது. இது அக்குள், இடுப்பு, முழங்கால் போன்ற தோல் மடிப்புகளின் கீழ் தோலில் எரிச்சலூட்டும் திட்டுகளை ஏற்படுத்து கிறது. முறையான சுகாதாரம் மற்றும் நுண் ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் அதிக பயன் பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் இதைத் தடுக்க முடியும்.
மேற்குறித்த நோய்கள் மட்டுமல்லாமல் ரிங்வோர்ம், சிரங்கு, ரோசாசியா, லிச்சென்ஸ்கெலோரோசஸ் போன்ற நோய் களும் தோலைப் பாதிக்கின்றன. எவ்வகை தோல் நோயாக இருந்தாலும் முதற்கட்டத்திலேயே அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் போது எளிமை யாக அந்த நோயிலிருந்து விடுபட முடியும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.