ஜெயங்கொண்டம், ஆக. 26- ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் (23/ 8 /2024 முதல் 24 /8 /2024) வரை ஆகிய இரு நாட்கள் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. அதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் , 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்,100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்,மற்றும் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ,நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல்,4X 100 மீட்டர், மற்றும் 4X400 தொடரோட்டம்ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் 25 பள்ளியில் இருந்து சுமார் 700 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கவுதம் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும் மற்றும் நித்திஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர். 200மீட்டர் ஓட்டப்பந்தத்தில் அரிபிரசாத் இரண்டாம் இடமும் மற்றும் முகிலன் மூன்றாம் இடமும் பிடித்தனர் .80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சசிகரன் இரண்டாம் இடமும் நித்திஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர் மற்றும் உயரம் தாண்டும் போட்டியில் சசிகரன் மூன்றாம் இடமும் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மணிச்செல்வன் மூன்றாம் இடமும் பிடித்தனர்
17 வயதிற்குட்பட்ட பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தத்தில் பிரதீப் குமார் இரண்டாம் இடமும், சூரிய பிரகாஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர். கோலூன்றி தாண்டுதல் போட்டியில் அகிலன் இரண்டாம் இடமும் மனிஷ்குமார் மூன்றாம் இடமும் பிடித்தனர். தர்ஷினி வட்டு எறிதல் போட்டியில் முதலிடமும் ஈட்டியெறிதல் போட்டியில் இரண்டாம் இடமும் பிடித்தார். அக்ஷயா நூறு மீட்டர் தடைத்தாண்டும் ஓட்ட போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார். மற்றும் 4 X100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் மனிஷியா, யுவசிறீ ஜோஷிகா மற்றும் வினிஷி ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்தனர்.
19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஆன்ஸ்லெட் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும், மற்றும் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடமும் பிடித்தார். மேலும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பாலாஜி இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள்.
முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.
போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோர்களை பள்ளி தாளாளர் ,முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.