சென்னை, ஆக.26- காப்பீட்டுத் தொகை பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமை யாக ரத்து செய்ய வேண்டுமென சேலம் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
24.8.2024 அன்று எல்.அய்.சி. காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் சேலம் கோட்ட மாநாடு அய்ந்து சாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் ஆா்.நரசிம்மன் தலைமை யில் நடைபெற்ற மாநாட்டில், பொதுச் செய லாளா் ஆா்.ஆனந்தன் வரவேற்றார்.
இம்மாநாட்டில், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை மேலும் உயா்த்தக் கூடாது. காப்பீட்டுத் தொகை பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியினை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான வன்முறைகளைத் தடுக்க வலிமையான சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாக நிறை வேற்ற வேண்டும்.
பொதுத்துறை நிறுவன மான எல்.அய்.சி.யின் பங்குகளை ஒன்றிய அரசு மேலும் விற்பனை செய்யக் கூடாது. தொழிலாளா் நல சட்டங்களை மீண்டும் மாற்றி அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இதுகுறித்து காப்பீட்டு ஊழியா் கூட்டமைப்பின் தென்மண்டல இணைச் செயலாளா் எஸ்.ரமேஷ்குமார்
செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காப்பீட்டு ஊழியா் களின் முக்கிய கோரிக்கை யாக இருக்கும், ஆயுள் மற்றும் மருத்துவக் காப் பீட்டுக்கான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும்.
ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறாவிட்டால் அடுத்தகட்டப் போராட் டம் குறித்து வரும் டிசம்பா் மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா்.
இம் மாநாட்டில், செயற்குழு உறுப்பினா் எம்.கே. கலைச்செல்வி, தென் மண்டல காப்பீட்டு ஊழியா் கூட்டமைப்பின் துணைத் தலைவா் ஆா்.தா்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.