தமிழ்நாட்டில் வரும் 30ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல்!

viduthalai
1 Min Read

சென்னை, ஆக.26- தமிழ்நாட்டில் வரும் 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று (26.8.2024) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *