கன்னியாகுமரி கொட்டாரத்தில் பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி, ஆக. 25- சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாதுகாப்பு கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு விளக்கப் பொதுக்கூட்டம் கூட்டம் குமரி மாவட்ட கழக சார்பாக கொட்டாரம் சந்திப்பில் கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம்,தலைமையில் நடைபெற்றது.
ஒமாவட்ட கழகச் செயலா ளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்க வுரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் சுயமரியாதை இயக்க வரலாறு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமைப்பாதுகாப்பு, திராவிடர்கழக வரலாறு, தந்தை பெரியாருடைய தொண்டுகள், முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய சமூகநீதிப் பரப்புரைகள், செயல்பாடுகள் குறித்து விரிவாக சிறப்புரையாற்றினார்.
திமுக கொட்டாரம் பேரூர் செயலாளர் எஸ்.வைகுண்ட பெருமாள், பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலாளர் எம். பெரியார் தாஸ், இளைஞரணி மாவட்டச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் அறுகுவிளை மு.இராஜன், தும்பவிளை மு.பால் மணி, கோட்டாறு பகுதி கழகத் தலைவர் ச.ச. மணிமேகலை மற்றும் ஏராளமான திமுக தோழர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கவிமணி அவர்களுடைய மணிமண்டப பணிகளை வேகப்படுத்தவும், முக்கடல் அணையைத் தூர்வார நடவடிக்கை, நீர்வளத்துறை கால் வாய் தண்ணீரை கடைவரம்புவரை கொண்டு செல்ல எடுக்க வேண்டுமெனவும் அரசுக்கு இக்கூட்டத்தில் கோரிக்கை வைத்து தீர்மானிக்கப்பட்டது.
வடலூரில் கழக பொதுக்கூட்டம்
வடலூர், ஆக. 25- வடலூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு பெண் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் 23.8.2024 மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வடலூர் நகர தலைவர் சு. இராவணன் தலை மையில் நடைபெற்றது.
வடலூர் நகர செயலாளர் இரா.குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாவட்ட இணை செயலாளர் நா. பஞ்சமூர்த்தி, வடலூர் நகர அமைப்பாளர் நா.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.அருணாச்சலம் தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி இணைப்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோ தரன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் இரா.பெரியார் செல்வம், நா.உதயசங்கர், டிஜிட்டல் ராமநாதன், க.சேகர், ந. கனகராசு, நூலகர் இரா கண்ணன், தங்க பாஸ்கர், இரா.மாணிக்கவேல், செ.முனியம்மாள், தி.மாதவன், ராம இந்திரஜித், தருமன், வா.சேகர், பா.செந்தில்வேல், இரா.முத்தையன், குறிஞ்சிப்பாடி சுமலதா ஆகியோரும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மறுவாய் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
சேந்தநாட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
சேந்தநாடு, ஆக.25- கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டம் சார்பாக சேந்தநாடு பகுதியில் 21.08.2024 அன்று மாலை 5.00 மணியளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாது காப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 A(h) பிரிவு விளக்க பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு விழுப் புரம் மாவட்ட செயலாளர் அரங்க. பரணிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் த. பகவான் தாஸ் வரவேற்றார், மாவட்ட தலைவர், சே. வ.கோபண்ணா, மாவட்ட ப.க. தலைவர் துரை. திருநாவுக்கரசு, மாநில இளைஞரணி துணைத் தலைவர் தா.தம்பி பிரபாகரன், பழங்குடி மக்கள் முன்னணித் தலைவர் சுடரொளி சுந்தரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன், சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கழக துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி மற்றும் மாநில அமைப்பாளர் தா. இளம்பரிதி சிறப்புரை யாற்றினார்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக ஈட்டி கணேசன் மந்திரமா? தந் திரமா? சீரிய அறிவியல் செயல்விளக்கம் நடை பெற்றது. இதனை திர ளான பொது மக்களும், இளைஞர்களும், மாண வர்களும் கண்டு தெளிவு பெற்றனர்.
இந்நிகழ்வில் விழுப் புரம் மாவட்ட துணைத் தலைவர் க.திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட துணைச்செயலாளர் ஏ.இரமேஷ், மேனாள் மாவட்ட அமைப்பாளர் ஆ.துரை, கல்லக்குறிச்சி மாவட்ட ப,க தலை வர் பெரியார் பெருந் தொண்டர் அரங்க. செல்லமுத்து செஞ்சி நகர அமைப்பாளர் நந்தகுமார், விழுப்புரம் நகர தலைவர் கொ.பூங்கான், விழுப்புரம் நகர செயலாளர் ச. பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் வே.கீதா, அண்ணா கிராம ஒன்றிய தலைவர் இரா ஜேந்திரன், அன்னியூர் ஜெ.வசந்த்குமார், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அமைப்பாளர் பரந்தாமன், திருவெண் ணெய் நல்லூர் ஒன்றிய செயலாளர் வேலாயுதம் (எ) இராவணன், கல்லக் குறிச்சி மாவட்ட துணைச் செயலாளர் உளுந்தூர்பேட்டை பா. முத்து, கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கரிகாலன், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் ம.சு. தினேஷ், விரு தாச்சலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் வலசை பெரியார்மணி, திண்டிவனம் கழக மாவட்டச் செயலளார் சே. பரந்தாமன், திண்டிவனம் கழக மாவட்ட அமைப்பாளர் பா.வில்லவன்கோதை, திண்டிவனம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் நவா. ஏழுமலை, திண்டிவனம் நகரத்தலைவர் உ. பச் சையப்பன், சிறப்பு அழைப் பாளர்களாக செஞ்சி பணப்பாக்கம் பெருமாள், தொட்டி சங்கர்(திமுக), மொட்டையூர் பத்மநாபன்(திமுக), அசோக்(திமுக), சேந்தநாடு பகுதி திமுக பிரமுகர்கள் பழனி, சரண்ராசு, முருகதாசு, கோதண்டபாணி, கிராம நிர்வாக அலுவலர் ஜானகிராமன் ஆசிரியர்கள் ராஜேந்திரன், மணிகண்டன் மற்றும் சேந்தநாடு, அதனை சுற்றியுள்ள பொதுமக்களும், கழகத் தோழர்களும், இந்தியா கூட்டணி தோழர்களும் திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியாக திண்டிவனம் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.