“இன்னும் நூறாண்டுகள் திராவிட அரசியலுக்கான தேவை இங்கு உள்ளது” அமைச்சர் மனோ தங்கராஜ்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஆக.25 நுங்கம்பாக்கத்தில் அமைந் துள்ள எம்.சி.சி. பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் நேற்று (24.8.2024) நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது, “சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கோரிக்கை வைக் கப்பட்டது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் முத்தமிழறிஞர் கலை ஞர் தான். கல்வி நிறுவனங் களும் அவைகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் க.பொன் முடிக்கு நன்றாகத் தெரியும் என்பதால் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார்.

கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்ட சமூ கத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்நிலையை போக்கும் ஆயுதமாக மீண்டும் கல்வி பிறந்தது. குறிப்பாக 17 சதவீதம் கிறிஸ்துவர்கள் உயர்ந்த பொறுப்பில் இருந்த நிலையில், தற்போது 1 சதவீதம் தான் உள்ளார்கள் என்பதை உற்றுக் கவனிக்க வேண் டியுள்ளது. மேலும் மற்ற ஒரு சமூகம் 70 சத வீதமாக உயர்ந்துள்ளது.

பொதுவான உரிமை சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படுகிறது. தனி யாக வழங்கப்பட்ட உரிமைகளிலும் பிரச்சி னை உள்ளது. இந்த இரண்டாம் நிலை சிறு பான்மை மக்களுக்கு இல்லை என்பது என் கருத்து. எல்லோரும் சமம் என்ற தன்மை வர வேண்டும். இது நமக்கான அச்சுறுத்தல் இல்லை –––- தேசத்திற்கான அச்சுறுத்தல் –- இதற்கான விழிப்புணர்வு வேண்டும்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் பல சமூகங்களை ஒன் றிணைத்து அவற்றின் முன்னேற்றத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் அரும்பாடு பட்டு வருகி றார். இதன் காரணமாகத் தான் சமத்துவ வழியில் பெண்கள் விளிம்பு நிலை மக்கள் என அனைவரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறார்கள்.

குறிப்பாக கல்விலும் வேலைவாய்ப்பிலும் யாருக்கும் எந்த மாநிலத்திலும் இல் லாத அளவிற்கு ஒரு முன்னேற்றம் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல திட்டங்களின் வாயிலாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் இன்னும் நூறாண்டு காலங்கள் கூட திராவிட அரசியல் இந்த மண்ணில் இருக்க வேண்டிய அவசி யம் – தேவை இருக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் காமராஜரைப் பெருமைப்படுத்தி பல மேடைகளில் பேசியுள்ளார். திமுக அரசு பெருந்தலைவர் காமராஜரை புறக்கணித்து பேசுகிறது என்பது மிகவும் ஒரு தவறான கருத்து. பல உலக நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். அதன் அடிப்படையில் தான் கூறுகிறேன், இந்தியாவில் மட்டும் தான் ஜாதி ரீதியில் பல வன்முறைகள், பல புறக்கணிப்புகள் நடைபெற்று வருகிறது.

வட மாநிலங்களில் ஜாதியத்தை அடிப்படை யாகக் கொண்டு பல வன்முறைகள் அதிக அளவில் நடைபெற்று உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் அவை இல்லை என்றால், அதற்கு திராவிட அரசுதான் காரணம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *