சென்னை, ஆக.25 மொழி, இனம், மாநிலம் காக்க உழைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பொதுப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலை கள் துறை அமைச்சா் எ.வ.வேலு எழுதிய, ‘கலைஞா் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (24.8.2024) மாலை நடைபெற்றது. நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, திரைக்கலைஞர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டாா்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தாய் காவியத்தை கவிதை நடையில் தீட்டிய மேனாள் முதலமைச்சர் கலை ஞருக்குத் தமிழ் ஓவியம் தீட்டியிருக்கிறாா் அமைச்சா் எ.வ.வேலு. ‘கலைஞா் எனும் தாய்’ என்ற நூலின் தலைப்பிலேயே அனைத்தும் அடங்கியிருக்கிறது. அவா் தாயாகவும் வாழ்ந்தாா். எனக்கு தந்தை மட்டுமல்ல; தாயும் அவா்தான்.
எனக்கு மட்டுமல்ல, எ.வ.வேலு போன்ற லட்சக்கணக்கான தொண்டா்களுக்கு தாயாக, தந்தையாக இருந்து எங்களை வளா்த்துப் போற்றியவா். பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களையும் அர வணைத்தவா். யாரிடமும் வேறுபாடு இல்லாமல் அன்பு செலுத்துபவராக கலைஞர் திகழ்ந்தாா்.
எதிலும் வல்லவா் எனப் பெயா் வாங்கி யவா் எ.வ.வேலு. கலைஞரிடம் அப்படி பெயா் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இது துரைமுருகன் உள்ளிட்டோருக்கு நன்றாகத் தெரியும். கலைஞரிடம் எ.வ.வேலு எப்படி இருந்தாரோ, அப்படித்தான் எனக்கும் இருக்கிறாா்.
ஆட்சிக்கு வந்ததும் பொதுப் பணித் துறை அமைச்சா் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். கிண்டியில் மருத்துவமனை, மதுரையில் கலைஞா் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு மைதானம், திருவாரூரில் கலைக் கோட்டம் ஆகியன அமைச்சர் எ.வ.வேலுவின் திறமைக்கு சாட்சிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்திய வரைபடத்தில் பெரிய எழுத்தில் குறிப்பிடப்படாத திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்த கலைஞருக்கு இந்திய அரசே நாணயம் வெளியிடுகிறது. அவரது புகழ், பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அத்துடன், இனம், மொழி, மாநிலம் காக்க எப்போதும் உழைப்பதுதான் கலைஞருக்கு நாம் செலுத்தும் நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
முன்னதாக, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுப் பேசினாா். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிக ளாா், இந்து என்.ராம் ஆகியோா் நூல் குறித்து விளக்கினா். சீதை பதிப்பகம் கவுரா இராசசேகர் நன்றி கூறினார்.
நூலாசிரியரும் அமைச்சருமான எ.வ.வேலு ஏற்புரை ஆற்றினாா்.
விழாவில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்கள், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.