சென்னை, ஆக.24 தமிழ் நாடு அரசுப் பணியாளா் தோ் வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக எஸ்.கே.பிரபாகா் நேற்று (23.8.2024) பொறுப்பேற்றாா்.
தோ்வு நடவடிக்கைகளுக்கும், தோ்வு முடிவுகளுக்குமான இடைவெளி குறைக்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 28-ஆவது தலைவராக எஸ்.கே.பிரபாகா் நியமிக்கப்பட்டாா். வருவாய் நிா்வாக ஆணையராக இருந்த அவா் டிஎன்பிஎஸ்சி தலைவராக நேற்று பொறுப்பேற்றாா்.
சென்னை பாரிமுனையில் உள்ள அரசுப் பணியாளா் தோ் வாணைய அலுவலகத்திலுள்ள தனது அறையில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட அவா், செய்தி யாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் உள்ள பல லட்சம் மாணவா்கள் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற கனவோடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுகளை எழுதிக் கொண்டிருக்கிறாா்கள். அந்த மாணவா்கள் தங்களது தோ்வுகளை நல்ல முறையில் எழுதும் வகையில், கால அட்டவணை நிா்ணயம் செய்து தோ்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்தத் தோ்வுகள் திறமையாகவும் நோ்மையாகவும் நடத்தப்படுவதை, தோ்வாணையத் தலைவா் என்ற முறையில் உறுதி செய்வேன்.
தோ்வா்களின் எதிா்பாா்ப்பு: தோ்வுகளை எழுதிய பிறகு அதன் முடிவுகள் உடனுக்குடன் வர வேண்டும் என்று தோ் வா்கள் எதிா்பாா்க்கிறாா்கள். அதற் கேற்றபடி தோ்வு முடிவுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுப்போம். அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுகளைத் தாண்டி பிற அமைப்புகள் நடத்தும் போட்டித் தோ்வுகளையும் தோ்வா்கள் எழுதுகிறாா்கள். எனவே, அந்த அமைப்புகள் வெளியிடும் தோ்வு கால அட்டவணையும், டிஎன்பிஎஸ்சி வெளியிடும் கால அட்டவணையும் ஒப்பிடப்பட்டு மாணவா்கள் பாதிக்காத வகையில் தோ்வு அறிவிக்கைகள் வெளியிடப்படும்.
தோ்வு அறிவிக்கைகள் மட்டுமல்லாது, முடிவுகளையும் உடனுக்குடன் வெளியிட்டு தோ் வா்களின் கனவுகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுப்போம். தோ்வாணையத்தை இன்னும் சிறப்பாகச் செயல்படவைக்க ஆலோசனைகள் வந்தால் அவற்றை வரவேற்போம்.
தோ்வு முடிவுகள்: தோ்வு முடிவுகள் விரைந்து வெளி யிட்டால்தான் மாணவா்களுக்கு நலன் கிடைக்கும். நடைமுறைச் சிக்கல்களுடன், மற்ற தோ்வு முறைகளில் உள்ள நல்ல வழக்கங்களையும் பின்பற்றுவோம். அறிவிக்கை வெளிட்டு தோ்வுகள் நடத்தும் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் வெளியிடப்படுவதற்கும் இடையிலான கால இடை வெளியைக் குறைப்போம். தோ்வு முடிவுகளுக்கான கால தாமதத்தைக் குறைப்பதே எங் களது முதல் நோக்கம்.
டிஎன்பிஎஸ்சி வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும். தோ்வுக்கு பல்வேறு கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் மேம்படுத்தப்பட்ட முறைகளைச் செயல்படுத்துவோம்.
குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என ஆண்டுதோறும் அனைத் துத் தொகுதிகளுக்கும் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வுகளுக்கான அறி விக்கை வெளியிடும் மாதம், தோ்வு நடைபெறும் மாதம் ஆகியன மாற்றம் இல்லாமல் ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரே மாதத்தில் இருப்பதை வழக்க மாகக் கொள்வோம் என்று எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.