ஈழத் தமிழர் பிரச்சினை தீர்வுக்கு சகலரும் ஓரணியாக வேண்டும்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இலங்கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

* தமிழ் பொது வேட்பாளருக்கும் வரவேற்பு
* மீனவர்கள் பேசுவதே பிரச்சினை தீர வழி!

யாழ்ப்பாணம், ஆக.24 ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலில் சகல தரப்பினரும் ஓரணியில் திரள வேண்டும். ஒத்த கருத்துள்ளவர்களை இணைக்கும் பணியை திராவிடர் கழகம் செய்யும் – இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டி யிடுவதையும் அவர் வரவேற்றுள்ளார்.
இலங்கை மற்றும் பன்னாட்டு ஊடகமான ‘டான் தமிழ்ஒளி’ தொலைக்காட்சியின் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச் சியில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் ‘ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு முதலில், ஈழத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் தீர்வு காண்பது சாத்தியம்.

‘தமிழ்நாடு – இலங்கை தமிழ் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் பேச்சுகளை நடத்த வேண்டும். இரு நாடு களின் அரசாங்கங்களும் பேசுவதைவிட இரு நாடுகளின் மீனவர்களும் பேசுவதே பொருத்தமானது. இரு தரப்பு மீனவர்களும் தமக்குள் பேசி விட்டுக் கொடுப்புகளை செய்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்’’ என்று கூறினார்.
வரும், இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவதை ‘நல்ல விடயம்’’, என்று கூறி வரவேற்றார். அத்துடன், ‘தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும்போது எங்களுடைய ஒற்றுமையை பார்த்து பெரும்பான்மை இனத்தவர்கள் பயப்பட வேண்டும். இதன் மூலம் எங்களுடைய செய்தி சொல்லப்பட வேண்டும்’ என்றார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பங்கேற்ற ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சி நாளை (25.8.2024) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ‘டான் தமிழ் ஒளி’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *