தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 22.8.2024 அன்று தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருடைய ஆராய்ச்சி திறனை மேம்படுத்திடவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திடவும் முதலமைச்சரின ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்களுக்கு ஆராய்ச்சி படிப்பைத் தொடர மாதம் ரூ.25,000 ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.