ஈரோடு கல்வெட்டு ஆய்வாளர் பெரும் புலவர் செ. இராசு அவர்களுக்கு நமது வீர வணக்கம்

Viduthalai
1 Min Read

அரசியல்

அந்தோ! பெரும் புலவர் தமிழறிஞர் – கல்வெட்டு ஆய்வாளர் ஈரோடு  புலவர் செ.இராசு (வயது 85) அவர்கள் உடல் நலக் குறை வினால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

தமது எழுத்துப் பணிகளின் மூலம் அடிக்கடி  ‘விடுதலை’  ஏட்டின் வழி  தொடர்பு கொண்டும், அடிக்கடி  நம்மிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசி வந்த நல்லறிஞர். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழ் ஆய்வுலகத்திற்கே ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை 
9.8.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *