இழப்பீடு கொடுக்க மறுத்த காப்பீட்டு நிறுவனம் – நுகர்வோர் ஆணையம் கொடுத்த தீர்ப்பு?

Viduthalai
2 Min Read

தூத்துக்குடி, ஆக.24- சேவைக் குறைபாடு காரணமாக நான்கு சக்கர வாகனத்திற்குச் செலுத்தப் பட்ட ரூ.11 லட்சம் மற்றும் ரூ.1,10,000 இழப்பீடு ஆகியவற்றை பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பென்னி மேத்யூ. இவரது நான்கு சக்கர வாகனம் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாராக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த வாகனத்தை திருநெல் வேலியிலுள்ள ஒரு கார் பழுது பார்க்கும் நிறுவனத்திடம் சரி செய்ய ஒப்படைத் துள்ளனர்.
அவர் தனது நான்கு சக்கர வாகனத்திற்கு விபத்துக் காப்பீடு செய்திருந்த நிலையில், இதற்கான செலவுத் தொகையை தருமாறு பொதுத்துறை காப்பீடு நிறுவனத்திடம் உரிய ஆவணங்களுடன் புகார்தாரர் விண்ணப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
ஆனால், அந்த காப்பீட்டு நிறு வனம், சரியான காரணங்களைக்கூட கூறாமல் விபத்து சேதத்திற்கான பணத்தை தர மறுத்துள்ளது. பல முறை நேரில் சென்றும் சரியான பதில் கிடைக்கவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பென்னி மேத்யு, வழக் குரைஞர் மூலம் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத் திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், அதன் பின்னரும் உரிய பதில் கிடைக் காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ”நான்கு சக்கர வாகனத்திற்கு ஏற்கெனவே செலுத்தப்பட்ட விலையான ரூ.11 லட்சம் மற்றும் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப் பீட்டுத் தொகையாக ரூ.1,00,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 என மொத்தம் ரூ.1,10,000-அய் இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர். ”நுகர்வோர்களின் குறை தீர்ப்பதற்காக இயங்கி வரும் அமைப்புதான் நுகர்வோர் குறை தீர் ஆணையம். இதன் மூலம் பொருள் கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டவழியாக நிவா ரணம் பெறலாம்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன. அனைவரும் கடைகளில் பொருட் களை வாங்கும்போது அதன் தரம், விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதோடு பொருள்களையோ, சேவைகளையோ பெறும் போது அவசியம் ரசீது கேட்டுப் பெற வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்” என்கிறார் ஆணையத்தின் தலைவர் திருநீல பிரசாத்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *