சென்னை, ஆக.24- சென்னையில் கிலோ கணக்கில் ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட விவகா ரத்தில் நகரில் உள்ள பெரிய உண வகங்களில் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சமீபத்தில் 1,600 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறி முதல் செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், இந்த ஆட்டிறைச்சி சென்னையில் உள்ள பெரிய பெரிய உணவகங்களில் வினியோகிக்கப்பட இருந்ததுதான்.
இந்த ஆட்டிறைச்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட நிலையில், ரகசிய தகவலின்பேரில் அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் காத்திருந்து இந்த கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முதற்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டிறைச்சி மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகள் விரைவில் வரும். என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கெட்டுப்போன ஆட் டிறைச்சி ஒருவேளை அதிகாரிகள் வசம் சிக்காமல் இருந்திருந்தால், அது நகரில் உள்ள பெரிய பெரிய உணவகங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டிருக்கும். மக்களும் சாப்பிட்டிருப்பார்கள். எனவே, பெரிய பெரிய உணவகங்களில் இது குறித்து ஆய்வை தொடங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.
ஏற்கெனவே சுழற்சி முறையில் உணவகங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வரும் அதி காரிகள் குழு, ஆட்டிறைச்சி மற்றும் இதர அசைவ உணவுகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? சுகாதாரம் காக்கப்படுகிறதா? என்பது குறித்த ஆய்விலும் ஈடுபட உள்ளார்கள். இதில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் உணவக நிர்வாகங்கள்மீது நடவடிக்கை பாயும் என்று தெரிய வருகிறது.
புகார் அளிக்கலாம்
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “கெட்டுப்போன ஆட்டிறைச்சி கைப்பற்றப்பட்ட விவ காரத்தில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவகங்கள் மீது தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
பொதுமக்களும் உணவு சம்பந்தமான புகார்களை 94440 42322 எண்ணில் தெரிவிக்கலாம். புகார்கள் ரகசியமாக வைக்கப்படும். நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றனர்.