சென்னையில் நீர் நிலைகள் மேம்பாடு குறித்து அமெரிக்க துணை அமைச்சருடன் சென்னை மாநகராட்சி மேயர் ஆலோசனை!

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.24- சென்னை மாநகர நீர்நிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க துணை அமைச்சர் தலைமையிலான குழுவினருடன் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆலோசனை நடத்தினார்.
பெருங்கடல்கள், பன்னாட்டு சுற்றுச்சூழல், அறிவியல் விவ காரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜெனிஃபர் ஆர்.லிட்டில் ஜான் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர் நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புற சுற்றுச்சூழல் மேம்பாடு, நகர்ப்புற திட்ட மிடல் தொடர்பான ஆலோ சனை கூட்டம் மேயர்
ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று (23.8.2024) நடந்தது. இதில், அமெரிக்க அமைச்சர் லிட்டில் ஜான், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹாட்ஜஸ் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.
சென்னை மாநகராட்சியின் நிலப்பரப்பு, 2015 முதல் 2023 வரையிலான மழைப் பொழிவு, 2005, 2008, 2015, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகள், மாநகரில் உள்ள ஆறுகள், மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், நகர்ப்புற வெள்ள மேலாண்மையில் உள்ள சவால்கள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

2021ஆம் ஆண்டு வெள்ளத் துக்கு பிறகு, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள், சென்னையில் அமைக்கப்படும் நீர் உறிஞ்சும் பூங்காக்கள், கூவம் ஆற்றில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மறுசீரமைப்புப் பணி, நீர்நிலை களில் ஆகாயத் தாமரை மற்றும் கழிவுகளை அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ண மூர்த்தி, தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், நீர்வளத் துறை தலைமை பொறியாளர் பொதுப்பணித்திலகம் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, மேயர், அமெரிக்க அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் நேப்பியர் பாலம் பகுதிக்கு சென்று, கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்தை பார்வையிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *