திருப்பத்தூர், ஆக.24 திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சந்திரபுரம் (பனந்தோப்பு) தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு மூட நம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் 51 A (h) விளக்க பொதுக்கூட்டம் நேற்று (23.08.2024) மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டம் பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர் வரவேற்பில், இரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர் தலைமையில் கு.ராஜமாணிக்கம் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர், டி.குமரேசன் கந்திலி ஒன்றிய மே.ஒன்றிய செயலாளர் தி.மு.க. டி.சி.சாந்தசீலன் ஒன்றிய தலைவர் நோக்கியம், சி.தமிழ்ச் செல்வன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், வே.அன்பு பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆகி யோர் முன்னிலையில், சி.ஏ.சிற்றரசன் மாநில இளைஞரணி துணைத் தலைவர் இணைப்புரையில் நடைபெற்றது.
முன்னதாக தந்தை பெரியார் சமத்துவ புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மந்திரமா? தந்திரமா? நடைபெற்றது. இதை பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றியத் தலைவர் மக்களிடையே மூட நம்பிக்கை ஒழிக்கும் விதமாக பல்வேறு தந்திர காட்சிகளை, கடவுள் இல்லை என்றும், தந்தை பெரியார் வாழ்க என்று சொல்லியும், இவை அனைத்தும் ‘‘மந்திரங்கள் அல்ல அனைத்தும் தந்திரங்களே’’ என்று சிறப்பாக விளக்கி செய்து காட்டினார். இவர் ‘‘மந்திரமா? தந்தி ரமா?’’ செய்து காட்டும் முதல் நிகழ்ச்சியாகும்.
அவர் நிகழ்ச்சியை தொடர்ந்து பெரியார் பெருந்தொண்டர் பெரியார் புத்தக நிலைய மேலாளர் சுயமரியாதைச் சுடரொளி டி.கே. நடராசன் அவர்களின் மறைவையொட்டி அவர் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இக் கூட்டத்தின் நோக்கம் குறித்து பெ. கலைவாணன் மாவட்டச் செயலாளர் உரையாற்றினார். அவர் தனது உரையில்,
1. கடவுள், பேய், பில்லி, சூனியம், சோதி டம் இது போன்ற மூட நம்பிக்கைகளை ஒழிப்பது.
2. இந்த மூட நம்பிக்கையால் மக்களுக்கு ஏற்படும் மனச் சிக்கலை விளக்குவது.
3. இந்த மலச்சிக்கல் தீர்க்க மந்திரவாதிகள், சாமியார்களிடம் செல்வதை தடுப்பது.
மேலும் இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு சொல்லுவது போன்று மக்களி டையே அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், மற்றும் விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலும், தந்தை பெரியார் அவர்களின் மூட நம்பிக்கைகள் இல்லா சமூகம் உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் அந்த அடிப்படையிலும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று தன் நோக்க உரையில் உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றி யவர்கள் வே.அன்பு மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் ஆற்றிய சிறப்புரை யில், மாகாபாரத கதைகளில் வரும் கதா பாத்திரங்களை விளக்கி, அதிலுள்ள மூட நம்பிக்கைகள் குறித்து உரையாற்றினார்.
அண்ணா சரவணன் மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் தனது சிறப்புரையில், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் ஏன் தோற்றுவித்தார் என்றும், பள்ளர்தெரு, பறையர் தெரு, சக்கிலியர் தெரு என்று ஜாதிக்கொரு தெரு இருந்த நிலையில், இங்கு அனைவரும் சமம் என்ற தந்தை பெரியார் கொள்கையை நிறைவேற்றும் வகையில், கலைஞர் அவர்களால் உரு வாக்கப்பட்ட சமத்துவபுரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த சமத்துவத்தை காக்கும் வகையில் அனைவரும் மூட நம்பிக்கைகள் துறந்து பகுத்தறிவோடு வாழ வேண்டும் என்று உரையாற்றினார்.
மகளிரணி மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தனது சிறப்புரையில், தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்காக என்ன என்ன செய்தார் என்பதை குறித்து விளக்கியும், மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகள் பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஜாதகம், சோதிடம், இராகுகாலம், எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் ஆகியவற்றால் ஏற்படும் கேடுகள், அதனால் ஏற்படும் மனச்சிக்கல் குறித்துப் பேசினார்.
நிறைவாக புவனகிரி யாழ் திலீபன் கழகப் பேச்சாளர் தனது சிறப்புரையில், மூட நம்பிக்கைகள் குறித்து விளக்கும் விதமாக பக்தி பாடல்களைப் பாடி கடவுள் பெயரால் செய்யும் மூடத் தனத்தை விளக்கினார். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகையில், பெண்களுக்கு சொத்துரிமையைப் பெற்று தந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதே போன்று கல்வி கற்று ஆண்களைப் போல பெண்களும் சரிசமமாக வாழ வேண்டும் என்றும் சொல்லியும் அதற்காக வழிவகை செய்தவர் பெரியார். அவர் தனது இறுதிக் காலம் வரை, தன் உடல் உபாதைகள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இந்த சமூகம் மேம்பட வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அவர் என்று உரையாற்றினார்.
மாவட்ட ஆசிரியரணி தலைவர்
கோ. திருப்பதி நன்றி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தோழர்கள் இராஜேந்தி ரன் சோலையார்பேட்டை நகர அமைப்பாளர், ரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர், இரா.கற்பகவள்ளி மாவட்ட தலைவர் மகளிர் பாசறை, சி.சபரிதா மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை, தி. நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, குமரவேல் மாவட்ட செயலாளர் ப.ஆசிரியரணி, அ.குமணன் மாவட்ட அமைப்பாளர் ப. ஆசிரியரணி, ஜெ.ரவி. மாவட்ட அமைப்பாளர் ப. ஆசிரியரணி, ஆர். பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே. மோகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி, குமரவேல், பெருமாள்சாமி, ஆ.ப. செல்வராஜ், சிவக்குமார் நகரதலைவர் சோலையார்பேட்டை, J.M.P.வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார்பேட்டை, சரவணன் லக்கிி நாயக்கன்பட்டி கிளைத் தலைவர், லட்சுமணன் லக்கிி நாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் மு. வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜசேகர் கிரி சமுத்திரம் கிளை தலைவர், மற்றும் சிவா கழக பொறுப்பாளர், ஜீவரத்தினம், க. முருகன், பெரியார் செல்வம் ஆகியோரும், தோழமை இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.
பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், தோழர்கள் அனைவருக்கும் அவர் இல்லத்தில் இரவு உணவு வழங்கி சிறப்பித்தார்.