1.9.2024 அன்று திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் “மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு-இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு” விளக்கப் பொதுக்கூட்டத்தில் ‘மண்டல்குழுவும் திராவிடர் கழகமும், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-நூல்களை அறிமுகம் செய்து ஆய்வுரை வழங்கவிருக்கும் சட்டப்பேரவை மேனாள் தலைவர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்களிடம் அழைப்பிதழை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கினார். உடன் மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன்.