செய்திச் சுருக்கம்

2 Min Read

பள்ளிகளில்…
சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரூ.6.50 கோடியில் சிசிடிவி கேமரா பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆட்சி மொழி
ஆட்சி மொழித் திட்டம் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்துக்கு சுழற்கோப்பையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பேரவைசெயலாளர் ஜி.சீனிவாசனிடம் வழங்கினார்.
மனநலம்
மனநல பாதிப்பு பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தேசிய சுகாதார திட்டத்தின் தமிழ்நாடு இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வலியுறுத்தியுள்ளார்.
உறுதி செய்ய
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரிவதை ஒப்பந்த தாரர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் அறிவுறுத்தி உள்ளார்.
தொடக்கம்
தமிழ்நாட்டில் 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்கள் மற்றும் 30 வயது வரையுள்ள பெண்கள் என மொத்தம் 2.70 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை
மருத்துவக் கல்லூரிகளில் குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கல்லூரிகளின் டீன்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி அறிவுறுத்தியுள்ளார்.
பேச்சு வார்த்தை
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 65ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு தொழிற் சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காற்றாலைகளில்…
புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. கடந்த ஓராண்டில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் 1,000 மெகா வாட், காற்றாலையின் உற்பத்தியில் 200 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலீடாக…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்துக்காக (இஸ்ரோ) ஒன்றிய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் இரண்டரை மடங்கு முதலீடாக திரும்ப வருகிறது என்று அதன் தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *