சென்னை, ஆக.24- உலகில் 24 சதவீதம் பேர் குடற்புழு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
குடற்புழு நீக்க மாத்திரை
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு,சென்னை செனாய்நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (23.8.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி முகாமை தொடங்கிவைத்தார்.
பின்னர், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின் கீழ் 8 கிலோ மீட்டர் நடைப்பயணம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டார். மேலும், மாநில அளவில் அனைத்து துறைகள் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுலா பொருட்காட்சியில், மருத்துவத்துறை அரங்கு முதல் பரிசு பெற்றது. இதற்கான விருது பொது சுகாதாரத்துறை இயக் குநர் செல்வவிநாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
வரும்முன் காப்போம்
உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் மண் மூலம் பரவக்கூடிய குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ள னர். எனவே, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக வருமுன் காப்போம் என்கின்ற அளவில் தற்போது குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப் பட்டு வருகிறது. குடற்புழு வால் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி மாற்ற குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆகையால், இந்த பாதிப்புகளி லிருந்து விடுபட தற்போது இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு வரு கிறது. 2.69 கோடி பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.
இந்த மாத்திரை சாப்பிட்டால் குடலில் உள்ள குடற்புழுக்கள் நீங்கி, உடல்வளர்ச்சி, உடல் எடை போன்றவை அதிகரிக்கும் குழந்தைகளுக்கு கை, கால்களை நன்றாக கழு வும் பழக்கத்தை கற்றுக்கொ டுக்க வேண்டும். உணவுக்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும் கையினை சுத்தமாக கழுவும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியில் 1,30,550 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விருது
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சென்னை தீவுத் திடலில் சுற்றுலாத்துறை சார் பில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், மருத்துவத் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மகத்தான திட்டங்கள் குறித்து பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்காக சுற்றுலாத்துறை சார்பாக விருது ஒன்றும் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக பாடுபட்ட பொது சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித் துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் சாந்தகுமாரி மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.