ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1: வக்புவாரிய மசோதா, சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் மசோதா, தற்போது “லேட்டரல் என்ட்ரி” போன்ற வற்றை கொண்டு வந்துவிட்டு பிஜேபி அரசு பின் வாங்குகிறதே? பின்வாசல் வழியாக கொண்டுவரும் திட்டமா?

– கே.பத்மா, சிட்லபாக்கம்

பதில் 1: முன்புபோல, அரசியல் பலம் இல்லை பா.ஜ.க. மோடி அரசுக்கு – அது மைனாரிட்டி அரசு. முன்பு போல எதிர்க்கட்சிகள் பலமற்று இருக்கவில்லை; பலத்துடன் உள்ளனர்.
முழு யதேச்சதிகாரம் இப்போது முடியாது; எனவே, பின்வாங்கிய ஒதுங்கல் எனலாம். எனவே, இத்தகைய ‘டர்னிங்’ சீன்களை இந்த நாடகத்தில் வரும் ஆண்டுகளில் மேலும் காண அதிக வாய்ப்புண்டு.

– – – – –

கேள்வி 2: திடீரென தமிழ்நாட்டிற்கு முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் வருகை அதிகரித்துள்ளதே?

– ம.முனீஸ்வரன், மதுரை

பதில் 2: ‘திடீரென’ வரவில்லை; முன்பே பற்பல நாடுகளுக்குப் பயணம் – துபாய், சிங்கப்பூர், இப்போது அமெரிக்கா – இங்கேயே பல நாடுகளின் பங்கேற்பு மூலம் முதலீடுகள் – காரணம் பெரியார் மண்ணாகிய நம் தமிழ்நாடு அமைதிப் பூங்கா, முதலீட்டு தொழில் முனைவோருக்கு பல வதிகளுடன் உள்ள மாநிலம் – நிலையான ஆட்சி – நிம்மதி அவர்களுக்கு நல்ல வெகுமதி – எனவே, தேன்கூடு கட்டுவது போல் வருகிறார்கள்! முதலீட்டைத் தருகிறார்கள்!

– – – – –

கேள்வி 3: பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுக்க யோசனை சொல்லாத மோடி, உக்ரைன் – ரஷ்யப் போரை நிறுத்துவாரா?

– வ.கார்த்திகேயன், கீழ்வேளூர்

பதில் 3: பதில் உங்கள் கேள்வியிலேயே அடக்கம்.

– – – – –

கேள்வி 4: நேரடி நியமனத்தை சந்திரபாபு நாயுடு கட்சி ஆதரித்துள்ளதே?
– ப.தினகரன், வடமதுரை
பதில் 4: தனியார் கார்ப்பரேட்களுக்கு எப்போதும் துணையாவார் அவர்; சமூக நீதி குறித்து அதிகம் கற்காதவர் என்பதால் – காலம் அவரை உணர வைக்கும்.

– – – – –

கேள்வி 5: வடமாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி என்பது எவ்வளவு பெரிய செய்தி. ஆனால், அதை ஊடகங்கள் அப்படியே கடந்துவிட்டனவே?

– க.குணசேகரன், செம்பட்டி

பதில் 5: கடந்துவிடவில்லை; மறைத் துள்ளார்கள்! காரணம், பெருங் கார்ப்பரேட் கொள்கையில்தானே ஊடகங்கள் – மோடி அரசுக்கு எதிரான செய்திகள் எல்லாம் அகால மரணம்தான்!

– – – – –

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 6: சிறுமிகளைப் பின்தொடர்ந்தாலே ‘போக்சோ’ சட்டம் பாயும் என்று கூறும் அதே மகாராட்டிரா நீதிமன்றம் – 2022ஆம் ஆண்டு சிறுமி உடை மீது மார்புப் பகுதியில் கைவைப்பது தவறில்லை (நாக்பூர் நீதிபதி புஷ்பா கனேடிவாலா 2022) என்று கூறியுள்ளதே? ஏன் இந்த முரண்?

– வெ.விஜயன், உளுந்தூர்பேட்டை

பதில் 6: அய்யய்யோ! சொல்ல வெட்கமாகுதே – புல்லுருவிகள் எங்கும் உண்டு போலிருக்கிறது!

– – – – –

கேள்வி 7: சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையில், “சீரோ” விழிப்புணர்வு விளம்பரம் கைகொடுத்துள்ளதே! விளம்பரம் செய்தால்தான் சாலைவிதிகளைப் பின்பற்றுவோம் என்ற மனநிலை நல்லதா?

– ச.தேன்மொழி, உடுமலைப்பேட்டை

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 7: நல்லதில்லைதான்! என்ன செய்வது? இது விளம்பர யுகமாயுள்ளதே! “எல்லாம் வல்ல கடவுள்களுக்கே” விளம்பர வெளிச்சம் தேவைப்படுகிறதே! என் செய்ய?

– – – – –

கேள்வி 8: வழக்கம் போல் மீண்டும் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுப்பு – அதை எதிர்த்து வழக்கு – என்பது தொடர்கதையாகி உள்ளதே? நீதிமன்றங்களின் நேரம் வீணாகாதா?

– வா.முத்து, தூத்துக்குடி

பதில் 8: பல உப்புச்சப்பற்ற வழக்குகள் நீதி மன்றங்களின் – நீதிபதிகளின் மதிப்புமிகு நேரத்தை பாழடிக்கின்ற வேதனை! அவர்களும் முடிந்தவரை தடுக்கவே பார்க்கிறார்கள். முடியவில்லை – அக்கப்போர் வழக்குகளுக்கு அபராதம்கூட போடுகின்றனரே!

– – – – –

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பார்ப்பனரை வீட்டின் உள்ளே சமமாக அமர வைப்பார்கள்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

சூத்திரனை முற்றத்தில் அமரவைப்பார்கள்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை அவர் அமைச்சரே ஆனாலும் கழிப்பறை அருகே அமரவைப்பார்கள்

கேள்வி 9: சங்கராச்சாரியார் முன் – அன்று பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன் இன்று பாஜக கட்சி தமிழ்நாட்டுத் தலைவர் என தொடர்ந்து தரையிலேயே உட்காருகிறார்களே? சங்கரமடத்தில் இருக்கைகளுக்குப் பஞ்சமா?

– பா.ஓவியன், அரும்பாக்கம்

பதில் 9: ‘மானம்’ என்றால் அண்ணாந்து பார்க்கும் ஆசாமிகளின் பகுத்தறிவு எவ்வளவு என்பதை புரிந்துகொள்ளட்டும்!

– – – – –

கேள்வி 10: தேர்தல் ஆணையம் மகாராட்டிரா தேர்தல் தேதியை அறிவிக்காமல் விட்டது ஏன்?

– போ.சிங்கராஜ், மணப்பாறை

பதில் 10: பிரதமர் வசதி பார்த்து, தேர்தல் தேதிகள் – முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தல் 40 நாள்கள் தொடர்ச்சி – இப்போது மட்டும் மாறுமா என்கிறார் நம்ம அலுவலகப் பணித் தோழர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *